பெண் மருத்துவர் கொலை நடந்தபோது.. கொல்கத்தா ஆர்ஜி கார் மருத்துவமனை முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் கைது
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட போது ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரியின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷை இப்போது சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வாரம் தான் அவருக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் ரெய்டு நடத்திய நிலையில், இப்போது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆக. 9ம் தேதி மேற்கு வங்கத்தில் உள்ள ஆர்ஜி கார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தின.

இந்த விவகாரத்தில் இதுவரை சஞ்சய் ராய் என்பவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இருப்பினும், இதில் வேறு சிலருக்குத் தொடர்பு இருக்கலாம் என்று பலரும் கூறி வருகின்றனர். இதைக் கண்டித்து நாடு முழுக்க போராட்டங்களும் நடந்து வருகின்றன.
பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட போது ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரியின் முதல்வராக இருந்தவர் சந்தீப் கோஷ். அவருக்கு இந்தச் சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் எனச் சொல்லப்பட்டது. பெண் மருத்துவர் கொல்லப்பட்ட போது அதைத் தற்கொலை எனப் பெற்றோரிடம் முதலில் சொன்னது, குற்றம் நடந்த செமினார் ஹால் அருகே புதுப்பிப்பு பணிகள் அவசர அவசரமாக நடந்தது என இவரைச் சுற்றிப் பல சர்ச்சைகள் எழுந்தன. இதையடுத்து கடந்த வாரம் அவரிடம் உண்மையைக் கண்டறியும் சோதனையையும் சிபிஐ அதிகாரிகள் நடத்தி இருந்தனர்.
இது மட்டுமின்றி ஆர்ஜி கார் மருத்துவமனையில் பல ஊழல்கள் நடந்துள்ளதாகவும் அதில் சந்தீப் கோஷுக்கு நேரடியாகத் தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. இது குறித்தும் சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், சந்தீப் கோஷுக்கு சொந்தமான 15 இடங்களில் கடந்த வாரம் ரெய்டும் நடத்தினர்.
இந்தச் சூழலில் இதற்கிடையே சிபிஐ அதிகாரிகள் ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷை இப்போது கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவைத் தொடர்ந்து சந்தீப் கோஷ் முதல்வராக இருந்த கொல்கத்தா ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிதி முறைகேடுகள் நடந்ததாகக் கூறி சிபிஐ அதிகாரிகள் தான் வழக்குப் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications