பெண் மருத்துவர் கொலை நடந்தபோது.. கொல்கத்தா ஆர்ஜி கார் மருத்துவமனை முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் கைது
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட போது ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரியின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷை இப்போது சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வாரம் தான் அவருக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் ரெய்டு நடத்திய நிலையில், இப்போது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆக. 9ம் தேதி மேற்கு வங்கத்தில் உள்ள ஆர்ஜி கார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தின.

இந்த விவகாரத்தில் இதுவரை சஞ்சய் ராய் என்பவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இருப்பினும், இதில் வேறு சிலருக்குத் தொடர்பு இருக்கலாம் என்று பலரும் கூறி வருகின்றனர். இதைக் கண்டித்து நாடு முழுக்க போராட்டங்களும் நடந்து வருகின்றன.
பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட போது ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரியின் முதல்வராக இருந்தவர் சந்தீப் கோஷ். அவருக்கு இந்தச் சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் எனச் சொல்லப்பட்டது. பெண் மருத்துவர் கொல்லப்பட்ட போது அதைத் தற்கொலை எனப் பெற்றோரிடம் முதலில் சொன்னது, குற்றம் நடந்த செமினார் ஹால் அருகே புதுப்பிப்பு பணிகள் அவசர அவசரமாக நடந்தது என இவரைச் சுற்றிப் பல சர்ச்சைகள் எழுந்தன. இதையடுத்து கடந்த வாரம் அவரிடம் உண்மையைக் கண்டறியும் சோதனையையும் சிபிஐ அதிகாரிகள் நடத்தி இருந்தனர்.
இது மட்டுமின்றி ஆர்ஜி கார் மருத்துவமனையில் பல ஊழல்கள் நடந்துள்ளதாகவும் அதில் சந்தீப் கோஷுக்கு நேரடியாகத் தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. இது குறித்தும் சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், சந்தீப் கோஷுக்கு சொந்தமான 15 இடங்களில் கடந்த வாரம் ரெய்டும் நடத்தினர்.
இந்தச் சூழலில் இதற்கிடையே சிபிஐ அதிகாரிகள் ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷை இப்போது கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவைத் தொடர்ந்து சந்தீப் கோஷ் முதல்வராக இருந்த கொல்கத்தா ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிதி முறைகேடுகள் நடந்ததாகக் கூறி சிபிஐ அதிகாரிகள் தான் வழக்குப் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications