ராஜீவ் காந்தியின் 71வது பிறந்த நாள்... நாடு முழுவதும் சிலைகளுக்கு அஞ்சலி
டெல்லி / சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 71வது பிறந்தநாளையொட்டி, டெல்லியில் அவரது நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். சென்னையில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் அவரது உருவ சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
டெல்லியில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ப்ரியங்கா காந்தி, அவரது கணவர் ராபர்ட் வதேரா
உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். அஜய் மக்கான் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்களும் ராஜீவ் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
சென்னையில் அஞ்சலி
சென்னையில் ராஜீவ்காந்தி சிலைக்கு மாநில காங்கிரஸ் கட்சித்தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், உள்ளிட்ட தலைவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். ராஜீவ் காந்தி சிலைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
பொதுக்கூட்டம்
இன்று மாலை 6 மணிக்கு வடசென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்.கே.நகர் தொகுதி 41வது வட்டத்தில் ராயபுரம் மனோ தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது
I pay my tributes to India's former PM Shri Rajiv Gandhi on his birth anniversary.
— Narendra Modi (@narendramodi) August 20, 2015
டுவிட்டரில் மோடி
பிரதமர் நரேந்திர மோடி, தமது டிவிட்டர் பக்கத்தில், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் பிறந்த நாளையொட்டி, அவருக்கு மரியாதை செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.