அய்யாகண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் மீண்டும் டெல்லி பயணம்.. நாடாளுமன்ற முற்றுகைக்கு திட்டம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நாடாளுமன்ற முற்றுகை போராட்டம் நடத்துவதற்காக அய்யாகண்ணு தலைமையில் மீண்டும், தமிழக விவசாயிகள் டெல்லிக்கு சென்றுள்ளனர்.
திருச்சியில் இருந்து இன்று காலை, அய்யாக்கண்ணு தலைமையில் சுமார் 300 விவசாயிகள் டெல்லி புறப்பட்டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நாடாளுமன்றத்தை விவசாயிகள் முற்றுகையிட உள்ளதாக அறிவித்து கிளம்பியுள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, விவசாய கடன்களை மொத்தமாக தள்ளுபடி செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெல்லியில் போராட்டம் நடத்திய அய்யாகண்ணு தலைமையிலான விவசாயிகள் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கிடைக்காததால் தமிழகம் திரும்பினர்.
இந்த நிலையில், இன்று மீண்டும் டெல்லி புறப்பட்டுள்ளனர் விவசாயிகள். அவர்கள் தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி டெல்லி புறப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications