"நவாஸ் ஷெரிப்புக்கு மோடி, சிக்கன் பிரியாணி பரிமாறட்டும்" சசி தரூர் குசும்பு

Subscribe to Oneindia Tamil

Let's hope Nawaz Sherif served chicken biryani Shashi Tharoor says
திருவனந்தபுரம்: இந்தியா வரும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு மோடி, சிக்கன் பிரியாணி பரிமாறுவார் என்று நம்புகிறேன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு இந்தியாவுக்கு தனிப்பட்ட பயணமாக வந்திருந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு சிக்கன் பிரியாணி கொடுத்து உபசரித்தது. எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் தலைகள் பாகிஸ்தான் ராணுவத்தால் கொய்யப்பட்ட நிலையில், இதுபோன்ற விருந்தை காங்கிரஸ் நடத்தியது என்று தேர்தல் பிரச்சாரத்தின்போது நரேந்திரமோடி பேசினார்.

இந்நிலையில் மோடி பிரதமராக பதவியேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க பாகிஸ்தான் பிரதமர் உட்பட சார்க் நாடுகளின் பிரதமர்களுக்கு புதிய அரசு சார்பில் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. இதுகுளித்து தனது டுவிட்டர் வலைப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ள சசிதரூர் "மோடியின் அழைப்பை ஏற்று நவாஸ் ஷெரிப் இந்தியா வந்தால் அவருக்கு சிக்கன் பிரியாணி பரிமாறப்படும் என்று நம்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு முந்தைய அவரது டுவிட்டில், அனைத்து தரப்பையைும் அரவணைத்து செல்வதாக மோடி கூறியதை வரவேற்பதாகவும், அந்த வார்த்தையை காப்பாற்றுவதற்கு நாம் உறுதி செய்யவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த டிவிட் 706 முறை ரீடுவிட் செய்யப்பட்டுள்ளது, 439 முறை பேவரைட் செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+