ஜூலை 31 வரை.. ஒரே போடு.. மேற்கு வங்கத்தில் ஊரடங்கை நீட்டித்த மமதா பானர்ஜி
கொல்கத்தா: ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என்று மேற்கு வங்க மாநில அரசு இன்று அறிவித்துள்ளது.
கொரோனா பரவலைத் தொடர்ந்து மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல், நாடு முழுக்க பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தற்போது நாட்டில் ஐந்தாவது கட்ட ஊரடங்கு உள்ளது.
ஜூன் மாதம் 30ஆம் தேதியுடன் இந்த ஊரடங்கு காலகட்டம் நிறைவடையும். இதற்குப் பிறகு மத்திய அரசு எந்த மாதிரியான ஊரடங்கு கொண்டுவரும், அல்லது ஊரடங்கு இருக்காதா என்பது பற்றியெல்லாம் விவாதங்கள் வருகின்றன.

ஆனால், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி அரசு தங்கள் மாநிலத்தில் ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என்று, இன்று அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில், சில சலுகைகளும் வழங்கப்படும். அதேநேரம் ஊரடங்கு இல்லாமல் கொரோனாவை கட்டுபடுத்த முடியாது என்பதில் தெளிவாக இருப்பதை இந்த உத்தரவு காட்டுகிறது.
மத்திய சுகாதார அமைச்சகத்தின்படி, மேற்கு வங்கத்தில் மொத்தம் 14,728 உறுதிப்படுத்தப்பட்ட கோவிட் -19 கேஸ்கள் உள்ளன, அவற்றில் 580 பேர் உயிரிழந்தனர் என்கிறது புள்ளிவிவரம்.
தமிழகத்தில், ஏற்கனவே கொடுக்கப்பட்டு வந்த, பல்வேறு சலுகைகள் நாளை முதல் ரத்து செய்யப்படுகின்றன. அதில் முக்கியமானது மண்டலங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து ரத்து ஆகிறது.
ஜூன் 30ம் தேதி வரை இந்த மாதிரியான கெடுபிடிகள் அமலில் இருக்கும். அதன் பிறகு எந்த மாதிரி நடவடிக்கை எடுக்கப்படும் என்பது மருத்துவ வல்லுனர்கள் குழு உடன் முதல்வர் ஆலோசனை நடத்தி முடிவு செய்வார் என்று தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
உயர்த்தப்பட்ட மகளிர் உரிமைத்தொகை.. பெண்களுக்கு இனி மாதம் ₹3000 உதவி.. அறிவித்த மேற்கு வங்க அரசு! -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications