எதிர்க்கட்சிகள் கடும் அமளி.. திங்கள் வரை நாடாளுமன்றம் ஒத்தி வைப்பு
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் பிப்ரவரி 6ம் தேதி வரை லோக் சபா மற்றும் ராஜ்ய சபா ஒத்தி வைக்கப்பட்டன.
டெல்லி: காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் திங்கள் கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டன.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31ம் தேதி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரையுடன் தொடங்கியது. மறுநாள் பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்ப்பட்டது. இதனைத் தொடர்ந்து எம்பி அகமது மறைவிற்கு மரியாதை செலுத்தும் வகையில் நேற்று லோக் சபா ஒத்தி வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று காலை லோக் சபா கூட்டம் தொடங்கியது. கூட்டம் தொடங்கிய உடன் காங்கிரஸ் எம்பி வேணுகோபால், அகமது மறைவின் காரணமாக ஒத்தி வைப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.
இதற்கு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அனுமதி தரவில்லை. இதனால், காங்கிரஸ் எம்பிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் அமளியில் ஈடுபட்டது. சபாநாயகர் இருக்கை அருகில் சென்று எதிர்க்கட்சியினர் கோஷங்களையும் எழுப்பினர்.
மேலும், ராணுவத்தில் உணவு சரியில்லை என்று ராணுவ வீரர் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அவர் மத்திய அரசால் தொடர்ந்து மிரட்டப்படுவதாக குற்றம் சாட்டி ராஷ்டிரிய ஜனதா தள எம்பிகளும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து, சபாநாயகர் சுமித்ரா மகாஜன் 12 மணி வரை லோக் சபாவை ஒத்தி வைத்தார். பின்னர் கூடிய, லோக் சபாவில் மீண்டும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் பிப்ரவரி 6ம் தேதி வரை லோக் சபாவை சபாநாயகர் ஒத்தி வைத்தார். இதே போன்று, ராஜ்ய சபாவிலும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications