சிறிய மேகங்கள் மழையை உருவாக்கும்! ரயில் தண்டவாளத்தில் இருந்த காதல் கவிதை, பொம்மைகள் கிடந்த சோகம்
புவனேஸ்வரம்: ஒடிஸா ரயில் விபத்து நடந்த ரயில் தண்டவாளத்தில் குழந்தைகள் பயன்படுத்திய ஓவிய புத்தகங்கள், பொம்மைகள், காதல் கடிதங்கள் சிதறி கிடந்த சம்பவம் மனதை உலுக்குகிறது.
பெங்களூர்- ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகிய மூன்றும் ஒடிஸாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனகா பஜார் நிலையத்தில் தனித்தனி இடங்களில் விபத்தில் சிக்கியது.
இதில் நிறைய பெட்டிகள் சேதமடைந்தன. அவற்றில் 17 பெட்டிகள் மிகவும் மோசமான நிலையில் சேதமடைந்துள்ளது. நாட்டையே அதிர்ச்சிக்கும் சோகத்துக்கும் உள்ளான இந்த விபத்தில் இதுவரை 296 பேர் பலியாகிவிட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் 1000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துவிட்டனர்.

ஒடிஸா ரயில் விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெறுகின்றன. ரயில் தண்டவாளத்தை சுற்றி நிறைய பொருட்கள் சிதறி கிடக்கின்றன. உடல்கள், உடல் பாகங்கள் சிதறி கிடந்த நிலையில் அவை மீட்கப்பட்டு வருகின்றன. அப்போது அந்த தண்டவாளத்தில் இருந்த பொருட்களை பார்த்த மீட்பு படையினருக்கு மனதை உலுக்கிய சம்பவங்கள் நடந்தன.
பெங்காலியில் ஒருவர் காதல் கடிதம் எழுதியிருந்தார். அதில் சிறிய மேகங்கள் மழையை உருவாக்கும், சிறிய கதைகள்தான் காதலை உருவாக்கும் என எழுதியிருந்தார். அந்த கவிதை எழுதப்பட்டிருந்த நோட்டு புத்தகம் யாருடையது என தெரியவில்லை. அதில் அந்த கவிதையை எழுதியவர் பெயரும் இல்லை. அது போல் அந்த கவிதையை யாருக்கு அவர் எழுதியுள்ளார் என்பதும் தெரியவில்லை.
அந்த காதல் கவிதையை தீட்டியவர் உயிருடன் இருக்கிறாரா என தெரியவில்லை. நிறைய பேரின் செருப்புகள் சிதறி கிடந்தன. நிறைய சூட்கேஸுகள், பைகள் திறந்து கிடந்தன. துணிகள் கிழிந்த நிலையிலும் ரத்தம் தோய்ந்த நிலையிலும் கிடந்தன. கைகள் உடைந்த நிலையில் பொம்மைகள் கிடந்தன.
அது போல் குழந்தைகள் வரைந்த ஓவியநோட்டு புத்தகங்களும் கிடந்தன. அதில் சிகப்பு, நீலம், பச்சை, ஊதா நிறங்களில் கலர் செய்யப்பட்டிருந்தன. செருப்புகள் ஒன்றுடன் ஒன்று ஜோடி இல்லாத நிலையில் குவிந்து கிடந்தன. இவற்றை பார்க்கும் போது மீட்பு படையினர் மனம் உருகினர். இந்த விபத்து நடந்ததற்கான காரணம் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications