சிறிய மேகங்கள் மழையை உருவாக்கும்! ரயில் தண்டவாளத்தில் இருந்த காதல் கவிதை, பொம்மைகள் கிடந்த சோகம்
புவனேஸ்வரம்: ஒடிஸா ரயில் விபத்து நடந்த ரயில் தண்டவாளத்தில் குழந்தைகள் பயன்படுத்திய ஓவிய புத்தகங்கள், பொம்மைகள், காதல் கடிதங்கள் சிதறி கிடந்த சம்பவம் மனதை உலுக்குகிறது.
பெங்களூர்- ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகிய மூன்றும் ஒடிஸாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனகா பஜார் நிலையத்தில் தனித்தனி இடங்களில் விபத்தில் சிக்கியது.
இதில் நிறைய பெட்டிகள் சேதமடைந்தன. அவற்றில் 17 பெட்டிகள் மிகவும் மோசமான நிலையில் சேதமடைந்துள்ளது. நாட்டையே அதிர்ச்சிக்கும் சோகத்துக்கும் உள்ளான இந்த விபத்தில் இதுவரை 296 பேர் பலியாகிவிட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் 1000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துவிட்டனர்.

ஒடிஸா ரயில் விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெறுகின்றன. ரயில் தண்டவாளத்தை சுற்றி நிறைய பொருட்கள் சிதறி கிடக்கின்றன. உடல்கள், உடல் பாகங்கள் சிதறி கிடந்த நிலையில் அவை மீட்கப்பட்டு வருகின்றன. அப்போது அந்த தண்டவாளத்தில் இருந்த பொருட்களை பார்த்த மீட்பு படையினருக்கு மனதை உலுக்கிய சம்பவங்கள் நடந்தன.
பெங்காலியில் ஒருவர் காதல் கடிதம் எழுதியிருந்தார். அதில் சிறிய மேகங்கள் மழையை உருவாக்கும், சிறிய கதைகள்தான் காதலை உருவாக்கும் என எழுதியிருந்தார். அந்த கவிதை எழுதப்பட்டிருந்த நோட்டு புத்தகம் யாருடையது என தெரியவில்லை. அதில் அந்த கவிதையை எழுதியவர் பெயரும் இல்லை. அது போல் அந்த கவிதையை யாருக்கு அவர் எழுதியுள்ளார் என்பதும் தெரியவில்லை.
அந்த காதல் கவிதையை தீட்டியவர் உயிருடன் இருக்கிறாரா என தெரியவில்லை. நிறைய பேரின் செருப்புகள் சிதறி கிடந்தன. நிறைய சூட்கேஸுகள், பைகள் திறந்து கிடந்தன. துணிகள் கிழிந்த நிலையிலும் ரத்தம் தோய்ந்த நிலையிலும் கிடந்தன. கைகள் உடைந்த நிலையில் பொம்மைகள் கிடந்தன.
அது போல் குழந்தைகள் வரைந்த ஓவியநோட்டு புத்தகங்களும் கிடந்தன. அதில் சிகப்பு, நீலம், பச்சை, ஊதா நிறங்களில் கலர் செய்யப்பட்டிருந்தன. செருப்புகள் ஒன்றுடன் ஒன்று ஜோடி இல்லாத நிலையில் குவிந்து கிடந்தன. இவற்றை பார்க்கும் போது மீட்பு படையினர் மனம் உருகினர். இந்த விபத்து நடந்ததற்கான காரணம் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications