விரைவில் தேர்தல்.. 'பிராமணர்கள் சமூக வாக்குகளை கவர' மத்திய பிரதேச பாஜக அரசு அறிவித்த புது திட்டம்
இந்தூர்: மத்திய பிரதேசத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு ஆட்சியில் உள்ள பாஜக அரசு தற்போதே வாக்காளர்களை கவர வாக்குறுதிகளை அளித்து வருகிறது. அந்த வகையில் பிராமணர்கள் சமூக வாக்குகளை கவர பிராமணர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. விரைவில் அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. முதல்வராக இருக்கும் சிவராஜ் சிங் சவுகான் தற்போதே தேர்தலை மனதில் கொண்டு சில திட்டங்களை வெளியிட துவங்கி விட்டார்.

குறிப்பாக மத்திய பிரதேசத்தில் வசிக்கும் பிராமணர்கள் சமூகத்தினரின் வாக்குகளை கவரும் விதமாக புதிய அறிவிப்பு ஒன்றை அம்மாநில பாஜக அரசு வெளியிட்டுள்ளது. அதாவது, பிராமணர்கள் சமூகத்தினருக்குக்காக நல வாரியம் ஒன்று அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அது மட்டும் இன்றி இந்தூரின் ஜனபவ் பகுதியில் பரசுராம லோக் ஆன்மீக வழித்தடம் அமைக்கப்படும் என்றும் கூறினார்.
அது போக கோவிலின் செயல்பாடுகளில் அரசு தலையிடாது என்றும் கோவில் நிலங்களின் விவகாரத்தில் அங்குள்ள மதகுருக்களே மேற்கொள்ளலாம் என்று முடிவையும் எடுத்திருப்பதாக சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார். பிராமணர்கள் சமூகத்தில் அதான் கலாச்சாரத்தையும் மதத்தையும் எப்போதும் காப்பாற்றுகின்றனர் எனவே அவர்களுக்கான நல வாரியத்தை அமைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஐந்து முதல் ஆறு சதவீதம் வரையே பிராமணர்கள் சமூகத்தினர் உள்ளனர். இருந்தாலும் அவர்களுக்காக இவ்வளவு பெரிய முடிவை எடுத்தது அங்கு பல்வேறு அரசியல் ரீதியாக பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. எனினும் விந்திய மலைப்பகுதியில் ஒட்டி அமைந்துள்ள ரேவா மாவட்டத்தில் 40% மேலாக பிராமணர்கள் சமூக வாக்குகள் உள்ளன. கடந்த முறை பாஜக வெற்றி பெற இந்த வாக்குகள் கணிசமாக உதவியது.
எனவே இதை மனதில் கொண்டே இந்த முடிவை சிவராஜ் சிங் சவுகான் எடுத்திருக்கலாம் என்று தெரிகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விந்திய பகுதிகளில் மொத்தம் உள்ள 30 இடங்களில் 24 இடங்களில் பாஜக வென்றது. இந்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் பாஜகவில் இருந்து விலகிய புது கட்சி துவங்கியிருக்கும் நாராயன் திருப்பதி பாஜகவிற்கு அந்த பகுதியில் கடும் சவால் அளிக்கலாம் என்று அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இந்த காரணத்திற்காகவும் பாஜக பிராமணர்கள் சமூக வாக்குகளை குறிவைத்து தேர்தலுக்கு முன்பாக இத்தகைய ஒரு முடிவை அறிவித்துள்ளது. அதே வேளையில் பாஜக அரசின் இந்த முடிவை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. இப்போது வரை கேபினட்டில் அந்த சமூகத்திற்கு எந்த வாய்ப்பும் கொடுக்காமல் புறக்கணித்து உள்ள சிவராசன் தற்போது வாக்குகளை கவர்வதற்காக இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருப்பதாக காங்கிரஸ் சாடியது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications