ம.பி.யில் சோகம்... கொரோனா தொற்றுக்கு பாஜக எம்பி உயிரிழப்பு... பிரதமர் மோடி இரங்கல்!
போபால்: மத்திய பிரதேச மாநில பாஜக எம்பி நந்த்குமார் சிங் சவுகான் கொரோனா தொற்று காரணமாக பரிதாபமாக உயிரிழந்தார்.
கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக வென்டிலேட்டர் ஆதரவுடன் சிகிச்சை பெற்று வந்த நந்த்குமார் சிங் சவுகான் நேற்று இரவு உயிரிழந்தார்.
நந்த்குமார் சிங் சவுகான் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதேபோல் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக ஆறுதல் அளிக்கும் படியாக ஓரளவு தொற்று கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் தலைதூக்கியுள்ளது. தமிழகம் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் கொரோனாவை பெருமளவு குறைத்து விட்டன.ஆனால் கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொடர்ந்து ஆட்டம் போட்டு வருகிறது.

கேரளாவில் அதிகம்
கேரளாவில் தினமும் 5,000-க்கும் மேல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மகாராஷ்டிராவிலும் தொடர்ந்து பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.இந்தியாவில் 15,000-க்குள் இருந்த பாதிப்புகள் மீண்டும் 15,000-க்கு மேல் பதிவாகி வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று அதிகமுள்ள மாநிலங்கள் தடுப்பூசியை மக்களுக்கு விரைந்து செலுத்துமாறும், நோய் தாக்கம் அதிகமுள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகளை அதிகப்படுத்துமாறும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

பாஜக எம்பி உயிரிழப்பு
கொரோனாவுக்கு பொதுமக்கள் மட்டுமின்றி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட கலெக்டெர் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மகாராஷ்டிராவில் பெரும்பாலான அமைச்சர்களை கொரோனா தாக்கியுள்ளது. இந்த நிலையில் மத்திய பிரதேச பாஜக எம்பி நந்த்குமார் சிங் சவுகான் கொரோனா தொற்று காரணமாக பரிதாபமாக உயிரிழந்தார். நந்த்குமார் சிங் சவுகான் மத்திய பிரதேச மாநிலத்தின் கந்த்வா மக்களவை தொகுதி எம்.பி.யாக இருந்து வந்தார்.

கொரோனாதான் காரணம்
நந்த்குமார் சிங் சவுகானுக்கு சில வாரங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. உடல்நிலை மோசம் அடைந்ததால் அவர் மத்திய பிரதேசத்தில் இருந்து டெல்லி குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக வென்டிலேட்டர் ஆதரவுடன் அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.

பிரதமர் மோடி இரங்கல்
நந்த்குமார் சிங் சவுகான் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்த்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில், ' நந்த்குமார் சிங் சவுகான் மறைவால் மிகுந்த வருத்தம் அடைந்தேன். பாராளுமன்ற நடவடிக்கைகள், நிர்வாக திறன்கள் மற்றும் மத்திய பிரதேசம் முழுவதும் பாஜகவை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் ஆகியவற்றில் ஆற்றிய பங்களிப்புக்காக நந்த்குமார் சிங் சவுகான் நினைவுகூரப்படுவார். அவரது குடும்பத்திற்கு இரங்கல் என்று மோடி கூறியுள்ளார். இதேபோல் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications