ஒரு ரூபாய்க்கு அரிசி- மாணவர்களுக்கு செல்போன்கள்: ம.பி.யில் பாஜக தேர்தல் வாக்குறுதி
போபால்: மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தல் வாக்குறுதியாக ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கப்படும் என்று பாஜக அறிவித்துள்ளது.
மத்தியபிரதேச சட்டசபைக்கு வரும் 25-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலை முன்னிட்டு இன்று பாஜகவின் தேர்தல் அறிக்கை போபாலில் வெளியிடப்பட்டது.
தேர்தல் அறிக்கையில், உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கோதுமை, உப்பு ஆகியவை போலவே ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசியும் வழங்கப்படும். நிலமற்றோருக்கு 15 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும்.
விவசாயிகளுக்கு புதிய பயிர் காப்பீட்டு கொள்கை செயல்படுத்தப்படும். வேளாண் பாலிடெக்னிக்குகள் உருவாக்கப்படும். 2020ஆம் ஆண்டில் 20 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும்.
அரசு கல்லூரி மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன், சுயவேலைவாய்ப்பு ஏற்படுத்தும் விதமாக 5 லட்சம் இளைஞர்களுக்கு லேப்டாப் என பல்வேறு வாக்குறுதிகளை தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அறிக்கை வெளியீட்டில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவ்கான், லோக்சபா எதிர்க் கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், மாநில பாஜக தலைவர் நரேந்திர சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.











Click it and Unblock the Notifications