ராகுலின் விஸ்வரூபத்திற்கு பின்னால் நிற்கும் சூத்திரதாரி.. யார் இந்த அசோக் கெலாட்?
காங்கிரசின் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும், கட்சியில் அவர் முன்னிலை படுத்தப்படுவதற்கும் பின்னால் மூத்த தலைவர் அசோக் கெலாட் இருக்கிறார்.
Recommended Video

அஹமதாபாத்: காங்கிரசின் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும், கட்சியில் அவர் முன்னிலை படுத்தப்படுவதற்கும் பின்னால் மூத்த தலைவர் அசோக் கெலாட் இருக்கிறார். குஜராத் தேர்தலுக்கு முன்பாகவே ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் ஆனதற்கு இதுவே காரணம் என்றும் கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான கெலாட், குஜராத் காங்கிரஸ் பொறுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். ராகுல் மீது இருக்கும் சில எதிர்மறை விமர்சனங்களை மாற்றுவதில் இவர் முக்கிய பங்காற்றியுள்ளார்.

தலைவர் ஆனார்
காங்கிரஸ் கட்சியின் துணை தலைவராக இருந்தார் ராகுல் காந்தி. இந்த நிலையில் சென்ற வாரம் அவர் கட்சி உறுப்பினர்களால் ஒருமனதாக காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தலைவர் ஆனதற்கு பின் சோனியா காந்தி இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் சோனியா காந்தியைவிட ராகுலின் வெற்றிக்கு பின் அதிகம் இருந்தது அசோக் கெலாட்தான்.

அசோக் கெலாட் யார்
இந்திரா காந்தி காலத்து காங்கிரஸ் தலைவர் அசோக் கெலாட். கட்சியின் தீவிர விசுவாசி, மூத்த தலைவர். மத்திய சுற்றுலா மற்றும் விமான துறை அமைச்சராக செயல்பட்டுள்ளார். இந்திரா காந்திக்கு மட்டும் நெருக்கமாக இல்லாமல் ராஜிவ் காந்தி, சோனியா காந்திக்கும் நெருக்கமானவராக இருந்துள்ளார்.

முக்கிய பங்கு
இந்த தேர்தலில் ஒருவேளை காங்கிரஸ் வெற்றி பெற்றால் அதற்கு முக்கிய காரணமாக ராகுல் காந்தியும் அசோக் கெலாட்டும்தான் இருப்பார்கள். கெலாட்தான், குஜராத் மக்களின் நாடியை அறிந்து, தேர்தலுக்கு முன்பாகவே ராகுலை காங்கிரஸ் தலைவர் ஆக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தார்.

மாற்றினார்
சில காலம் முன்பு வரை ராகுலை இந்தியாவே 'பப்பு' என்று கிண்டல் செய்து வந்தது. அவரது குழந்தை தனமான நடவடிக்கையால் இப்படி கிண்டல் செய்யப்பட்டார். ஆனால் குஜராத் பிரச்சாரத்தில் இவரின் பேச்சு பாராட்டப்பட்டது. அதற்கு பின்னால் இருந்தது அசோக் கெலாட்தான். இவர்தான் ராகுல் என்ன பேசவேண்டும், என்ன மாதிரியான அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தியவர்.

காங்கிரசின் நிழல்
அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர்களின் நிழல் என்று கூறப்படுகிறது. இந்திராவும், ராஜிவ் காந்தியும் பல முக்கிய முடிவுகளை இவரின் ஆலோசனையின் பேரிலேயே எடுத்தனர். அந்த அளவுக்கு அரசியல் நுணுக்கம் தெரிந்தவர்.

புதிய அதிகாரம்
ஒருவேளை குஜராத்தில் காங்கிரஸ் வெற்றிபெற்றால் அசோக் கெலாட் முக்கிய பொறுப்பை பெறுவார். காங்கிரசில் யாரும் செய்யாத பல வித்தியாசமான தேர்தல் அணுகுமுறைகளையும், அதிரடிகளையும் அசோக் கெலாட் கடைபிடிப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் பாராட்டுகின்றனர்.












Click it and Unblock the Notifications