விபரீதமான பலூன் சண்டை.. 30 பேர் சேர்ந்து ஒருவரை 50 முறை கத்தியால் குத்தி கொலை.. டெல்லியில் கொடூரம்
டெல்லியில் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த கொலை ஒன்றின் சிசிடிவி பதிவுகள் தற்போது வெளியாகி இருக்கிறது.
Recommended Video
டெல்லி: டெல்லியில் சில நாட்களுக்கு முன்பு நடந்த கொலை ஒன்றின் சிசிடிவி பதிவுகள் தற்போது வெளியாகி இருக்கிறது. இதில் ஒரு நபரை 30 பேர் சேர்ந்து 50 முறை கத்தியால் குத்தி இருக்கிறார்கள்.
அந்த கொலையின் வீடியோ தற்போது இணையம் முழுக்க வைரல் ஆகியுள்ளது. மக்கள் நடமாடும் சாலையில் இப்படி ஒரு கொலை அனைவரையும் அதிர்ச்சியில் உள்ளாக்கி இருக்கிறது.
இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டது ஆசிஷ் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பலூன் சண்டை தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
பிரச்சனை
டெல்லி கான்பூரை சேர்ந்த சில இளைஞர்கள் மீது அதே பகுதியை சேர்ந்த சிறுவன் பலூனில் தண்ணீர் ஊற்றி அடித்துள்ளான். அவன் விளையாட்டிற்கு அடித்ததற்கு, அந்த இளைஞர்கள் அவனை தாக்கி இருக்கிறார்கள். அதே பகுதியை சேர்ந்த ஆஷிஷ் என்ற நபர் அவர்களை தாக்கி சிறுவனை காப்பாற்றி இருக்கிறார்.
கொலை செய்தனர்
இந்த நிலையில் நேற்று முதல்நாள் அவரை கொலை செய்ய அவர் செல்லும் ஜிம்முக்கு வெளியே காத்திருந்துள்ளனர். ஆஷிஷ் வெளியே வந்தது அவரை இருவர் கத்தியால் குத்தி இருக்கிறார்கள். இது வீடியோவாக வெளியாகி இருக்கிறது.
30 பேர்
அவர்கள் மொத்தம் 30 பேர் பைக்கில் வந்து இருக்கிறார்கள். எல்லோரும் ஆஷிஷை மாற்றி மாற்றி குத்தியுள்ளனர். மொத்தம் அவர் உடலில் 50 கத்தி குத்து காயங்கள் ஏற்பட்டு இருக்கிறது. அவர் அந்த இடத்திலேயே மரணம் அடைந்து இருக்கிறார்.
போலீஸ்
இந்த வீசிடியோ மிகவும் வைரல் ஆகி இருக்கிறது. அந்த வீடியோவில் இருக்கும் பெரும்பாலான நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டார்கள். ஆனால் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. போலீஸ் இவர்களை தீவிரமாக தேடி வருகிறது .