50,000 ரூபாய் கடனுக்காக மாமனாரை 50 தடவை கத்தியால் குத்திக் கொன்ற மருமகன்
மும்பை: மும்பையில், மாமனாரிடம் வாங்கிய ரூ. 50,000 கடனை அவர் திருப்பிக் கேட்டதால் கோபமடைந்த மருமகன், மாமனாரை கத்தியால் 50 முறை சரமாரியாக குத்திக் கொலை செய்தார்.
இதைத் தடுக்க வந்த தனது மனைவியையும் அந்த நபர் வெறித்தனமாக குத்திக் கொன்று விட்டார்.
மும்பை சாண்டிவலி பகுதியைச் சேர்ந்தவர் 29 வயதான நிலேஷ் காம்ப்ளே. இவரது மாமனார் மகாதேவ் ஏக்நாத் லோகண்டே. நிலேஷின் மனைவி பெயர் சரஸ்வதி.
தனது மாமனாரிடம் அவ்வப்போது கடன் வாங்குவார் நிலேஷ். இப்படியாக ரூ. 50,000 வரை வாங்கியிருந்தார். இந்தப் பணம் தொடர்பாக மாமனாருக்கும், மருமகனுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படும்.
அப்படித்தான் ச்ம்பவ நாளன்றும் மோதல் மூண்டுள்ளது. இதனால் கோபமடைந்த நிலேஷ் கத்தியை எடுத்து மாமனாரை சரமாரியாக குத்தத் தொடங்கினார். வெறித்தனமாக சரமாரியாக குத்தியதில் மாமனார் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சரஸ்வதி கணவரைத் தடுக்க முயன்றபோது அவருக்கும் குத்து விழுந்தது. இதில் சரஸ்வதியும் பிணமானார்.
மாமனார் உடலில் 50 இடங்களில் நிலேஷ் வெறித்தனமாக குத்தியிருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
காம்ப்ளே செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார். அந்த வேலை சமீபத்தில் பறி போய் விட்டது. இதனால் விரக்தியில் இருந்தார். இதையடுத்து மாமனாரிடம் ரூ. 70,000 கடனாக தருமாறு கேட்டார். ஏற்கனவே50,000 ரூபாய் வரை வாங்கியதைச் சுட்டிக் காட்டி மாமனார் பேசியதால்தான் ஆத்திரத்தில் கொலை செய்து விட்டார் காம்ப்ளே.











Click it and Unblock the Notifications