நிலக்கரி ஊழல்: சிபிஐ கோர்ட் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மன்மோகன் சிங் மனு
டெல்லி: நிலக்கரி ஊழல் வழக்கில் தனக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளதை எதிர்த்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ரூ.1.86 லட்சம் கோடி நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் குறித்து சிபிஐ பலர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்நிலையில் 2005ம் ஆண்டு ஒடிஷா மாநிலத்தில் உள்ள தலபிரா 2வது நிலக்கரி சுரங்கத்தை பிர்லா குழுமத்தின் ஹிண்டால்கோ நிறுவனத்திற்கு ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளதை சிபிஐ கண்டறிந்து வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் சுரங்கம் ஒதுக்கப்ட்டபோது நிலக்கரி துறை அமைச்சராக இருந்த முன்னாள் பிரதமர் மன்கோன் சிங்கின் பெயரும் சேர்க்கப்பட்டது.

இந்நிலையில் வரும் ஏப்ரல் 8ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மன்மோகன் சிங், பிர்லா குழுமத்தின் குமார மங்கலம் பிர்லா, ஹிண்டால்கோ அதிகாரிகள் சுபேந்து அமிதாப், பட்டாச்சார்யா, முன்னாள் நிலக்கரி துறை செயலாளர் பி.சி. பாரக் ஆகியோருக்கு சிறப்பு சிபிஐ நீதிமன்றம் கடந்த 11ம் தேதி சம்மன் அனுப்பியது.
இந்த சம்மனை எதிர்த்து மன்மோகன் சிங் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மன்மோகன் சிங் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார் என்று எந்த குற்றச்சாட்டும் இல்லை. அரசு சார்பில் முடிவு எடுப்பதை குற்றம் என்று கூற முடியாது என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்மோகன் சிங்கின் மனு நிராகரிக்கப்பட்டால் அவர் நீதிமன்றப்படி ஏறி கூண்டில் நின்று பதில் அளிக்க வேண்டி இருக்கும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications