மண்டேலா இறுதி சடங்கு: பிரதமர் மன்மோகன்சிங்– சோனியா பங்கேற்பு?
டெல்லி: தென்னாப்பிரிக்காவின் விடிவெள்ளி நெல்சன் மண்டேலாவின் மண்டேலா இறுதி சடங்கில் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பங்கேற்க கூடும் என்று டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென்னாப்பிரிக்கா முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா நேற்று ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.

அவரது இறுதிசடங்கு வருகிற 15-ந்தேதி சொந்த கிராமமான குலுவில் நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக நெல்சன் மண்டேலாவின் உடல் ராணுவ மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு உடல் பதப்படுத்தப்பட்டது.
அதன்பின்னர் தலைநகர் பிரிட்டோரியாவில் உள்ள யூனியன் கட்டிடத்தில் பொதுமக்கள் இறுதிஅஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு அணி அணியாக சென்று மக்கள் அவரது உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இறுதி சடங்கில் உலக தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்தியா சார்பிலும் உயர்மட்டக் குழுவினர் பங்கேற்கின்றனர். பிரதமர் மன்மோகன்சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் மண்டேலாவின் இறுதிசடங்கில் பங்கேற்க தென்னாப்பிரிக்கா செல்வர் என தகவல்கள் தெரிவிக்கின்றன












Click it and Unblock the Notifications