சியாச்சினில் இருந்து ராணுவத்தினரை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: மனோகர் பாரிக்கர்
விசாகப்பட்டினம்: சியாச்சின் பனிச்சிகரப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களை திரும்பப் பெறுவது மட்டுமே வீரர்களின் உயிரிழப்பு விவகாரத்திற்கு தீர்வாகாது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியுள்ளார்.
சியாச்சினில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட பனிச்சரில் சிக்கி 10 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இவர்களில் 4 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.

இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற சர்வதேச கடற்படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பனிச்சரிவில் சிக்கி வீரர்கள் உயிரிழந்த சம்பவம் தனிப்பட்ட முறையில் எனக்கு வருத்தத்தை அளித்துள்ளது. ஆனால், வீரர்களை சியாச்சினில் இருந்து திரும்பப் பெற வேண்டும் என்ற பரிந்துரைகள் முறையாக ஆராயாமல் வழங்கப்பட்டுள்ளண.
சியாச்சினில் வீரர்களைப் பணியில் ஈடுபடுத்துவதென்பது நாட்டின் பாதுகாப்பு தொடர்பானது. அந்தப் பகுதியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஆயிரக்கணக்கான வீரர்களை இழந்துள்ளோம். எனினும், கடந்த சில ஆண்டுகளாக உயிரிழப்புகள் குறைந்துள்ளன.
பனிச்சரிவு என்பது கணிக்க முடியாத இயற்கை நிகழ்வாகும். இதற்கு முன்னேற்பாடாக எதுவும் செய்திருக்க முடியாது. பனிச்சரிவில் சிக்கிய வீரர்கள் மீது பல டன்கள் பனி மூடியிருக்கும். அவர்கள் பிழைத்திருப்பார்கள் என்ற நம்பிக்கை இல்லை.
இவ்வாறு மனோகர் பாரிக்கர் கூறினார்.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications