அதிகாலையில்.. காருக்குள் 3 பிணங்கள்.. உடலில் பாய்ந்த புல்லட்கள்.. அதிர்ந்து போன மதுரா!
மதுரா: உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் நடந்த ஒரு பயங்கர சம்பவம் அந்த நகரையே உலுக்கி விட்டது.
மதுராவை உலுக்கிய இந்த சம்பவத்தில் மொத்தம் 3 பேர் உயிரிழ்துள்ளனர். ஒரு உயிர் ஊசலாடி வருகிறது. இந்த சம்பவம் குறித்து மதுரா எஸ்பி அசோக் குமார் மீனா விவரித்துள்ளார். சம்பவம் குறித்து அவர் கூறியது இதுதான்:
யமுனா எக்ஸ்பிரஸ்வே அருகே விருந்தாவனுக்கு அருகே ஒரு கார் நிற்பதாகவும், அதில் சில உடல்கள் இருப்பதாகவும் எங்களுக்குத் தகவல் வந்தது. இதையடுத்து போலீஸார் விரைந்தனர். கார் கண்ணாடியை உடைத்து உள்ளே பார்த்தபோது ஒரு ஆண், பெண், மற்றும் ஒரு குழந்தை பிணமாக கிடந்தது தெரிய வந்தது.
3 பேரின் உடலிலும் புல்லட்கள் பாய்ந்த நிலையில் இருந்தது. ஒரு பையன் உயிருக்குப் போராடியபடி இருந்தான். அவனை உடனே போலீஸார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்ற 3 பேரும் ஏற்கனவே உயிரிழந்திருந்தனர்.

மனைவி, மகள்
இறந்து கிடந்த நபர் பெயர் நீரஜ். இவர் மதுராவின் ஜெகன்னாத் பூரி பகுதியைச் சேர்ந்தவர். தொழிலதிபர். தனது மனைவி மற்றும் மகன், மகளை அவர் சுட்டுள்ளார். பின்னர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டுள்ளார் என்று தெரிய வந்துள்ளது.

தற்கொலை
கடந்த ஆறு மாதமாக டெல்லியில் குடும்பத்துடன் வசித்து வந்தார் நீரஜ். அங்கிருந்தபடி தனது வேலையைப் பார்த்து வந்தார். சம்பவத்தன்று மதுராவுக்கு குடும்பத்துடன் வந்த அவர் பின்னர் காரில் டெல்லி கிளம்பினார். வழியில் காரை நிறுத்தியுள்ளனர். அங்கு வைத்துத்தான் தனது குடும்பத்தினரை அவர் சுட்டுள்ளார். தானும் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

பதட்டம் இல்லை
ஆனால் இது தற்கொலை அல்ல , யாரோ சுட்டுக் கொன்றிருக்கலாம் என்ற கோணமும் எழுந்துள்ளது. போலீஸார் அந்தக் கோணத்திலும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். நீரஜ் மிகவும் இயல்பான நிலையில்தான் டெல்லிக்குக் கிளம்பியதாகவும், அவர் பதட்டமாக இல்லை என்றும் உறவினர் ஒருவர் கூறியுள்ளார்.

கொலையா?
மேலும் தற்கொலைக் குறிப்பும் இல்லாததால் இது கொலையாக இருக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. உயிருக்குப் போராடி வரும் 10 வயது சிறுவன் பிழைத்து வந்தால்தான் நடந்தது என்ன என்று தெரிய வரும். அவனுக்காக தற்போது போலீஸார் காத்துக் கொண்டுள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications