குப்பை நகரான பெங்களூரை சுத்தமான நகராக்க போராடும் 77 வயது முதியவர்: நீங்களும் உதவலாமே!
பெங்களூர்: குப்பை நகரமாக மாறியுள்ள பெங்களூரை சுத்தமான நகராக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் பெங்களூரைச் சேர்ந்த 77 வயது முதியவர்.
பெங்களூரில் உள்ள ராஜராஜேஸ்வரி நகரில் தனது மனைவி இந்திராவுடன் (69) வசித்து வருபவர் பத்ரிநாத் விட்டல்(77). ஐஐடி மும்பையில் படித்த அவர் மைசூரில் உள்ள என்.ஐ.இ.யில் சிவில் என்ஜினியராக பணியாற்றி ஓய்வு பெற்றார். ஓய்வுக்கு பிறகு பெங்களூரில் செட்டிலான அவர் ஓரிடத்தில் முடங்கிவிடவில்லை. பூங்கா நகரமான பெங்களூர் குப்பை நகரமாக ஆகிவிட்டது அவருக்கு கவலை அளித்தது. இது குறித்து அவர் பெங்களூர் மாநகராட்சி அதிகாரிகளை சந்தித்து பேசியும் பலனில்லை. இதையடுத்து அவர் பொதுமக்களை நாடிச் சென்றார்.

இது குறித்து அவர் ஒன்இந்தியாவிடம் கூறுகையில்,
சிலர் என்னை உதாசினப்படுத்தினர். சிலர் என்னை பிச்சைக்காரன் போன்று நடத்தினர். ஆனால் பெங்களூரை சுத்தமாக்குவது குறித்து பலர் ஆதரவு தெரிவித்தது மகிழ்ச்சியாக இருந்தது. குப்பைகளை கொட்டுவதால் ஏற்படும் விபரீதங்கள் பற்றி மக்களுக்கு தெரியவில்லை. மக்கும், மக்காத குப்பை என பிரித்து கொடுக்குமாறு கூறினாலும் மக்கள் அதை கேட்க தயாராக இல்லை. அரசு தீவிர நடவடிக்கை எடுக்காமல் இது குறித்து ஒன்றும் செய்ய முடியாது.
நகரை சுத்தமாக்குவது குறித்து அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கும் கடிதத்தில் நான் 1,500 பேரிடம் கையெழுத்து வாங்கினேன். ஆனால் அதை பெங்களூர் மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து தான் change.org மூலம் ஆன்லைனில் மக்களிடம் கையெழுத்து வாங்க முடிவு செய்தேன். 50 ஆயிரம் பேர் கையெழுத்து போடுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
ஏராளமானோர் கையெழுத்து போட்ட பிறகு அந்த கோரிக்கை கடிதத்தை நான் கர்நாடக முதல்வரிடம் அளிக்க திட்டமிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications