மேகலாயாவில் 300 அடி பள்ளத்தாக்கில் உருண்ட பேருந்து- 30-பேர் பலி
ஷில்லாங்: மேகாலாயா மாநிலத்தில் பேருந்து ஒன்று 300 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
மேகலாயா மாநிலம் சில்சாரில் இருந்து அஸ்ஸாமின் கவுகாத்தி நோக்கி சென்ற பயணிகள் பேருந்து மேகலாயாவின் தெற்கு பகுதியில் நேற்று விபத்துக்குள்ளானது. சோனாப்பூரில் உள்ள கிழக்கு ஜெயின்தியா மலைப் பகுதியல் நேற்றிரவு 10 மணியளவில் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது சுமார் 300 அடி பள்ளத்திற்குள் பேருந்து கவிழ்ந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த மீட்பு குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுட்டனர்.

அந்த பேருந்தில் 40 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் 30 பேர் உயிரிழந்ததாகவும், 8 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து அந்த மாவட்ட காவல்துறை காண்காணிப்பாளர் ஸ்பில் தாமர் கூறுகையில், விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது. பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்துள்ளது என்பதால், மீட்புக் குழுவினர் தீவிரமாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன என்று கூறினார்.












Click it and Unblock the Notifications