பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளுங்கள்.. காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு மெகபூபா அழைப்பு
ஸ்ரீநகர்: காஷ்மீர் வன்முறை சம்பவங்களுக்கு தீர்வு காண அங்கு பயணம் மேற்கொள்ளும் அனைத்து கட்சி குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த பிரிவினைவாதிகளுக்கு முதல்வர் மெகபூபா முப்தி அழைப்பு விடுத்துள்ளார்.
காஷ்மீரில் தீவிரவாத அமைப்பின் தலைவர் புர்கான்வானி சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து கடந்த ஜுலை 9ம் தேதியில் இருந்து காஷ்மீரில் தொடர்ந்து கலவரம் நடந்து வருகிறது. இந்தக் கலவரத்தில் இதுவரை 69 பேர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளர்.

காஷ்மீரில் நிலவும் வன்முறை போராட்டங்களுக்கு தீர்வு காணும் வகையில், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் அடங்கிய பிரதிநிதிக்குழுவை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.
அதன்படி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் மூத்த தலைவர் சரத் யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் டி.ராஜா, அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அஸாதுதீன் ஒவைஸி, முஸ்லிம் லீக் கட்சியின் இ.அகமது, அதிமுக எம்.பி. பி.வேணுகோபால், திமுக எம்.பி. திருச்சி சிவா உள்பட 28 பேர் மற்றும் அரசு அதிகாரிகள் இன்று காஷ்மீர் செல்ல உள்ளனர்.
இந்த நிலையில், காஷ்மீரில் பயணம் மேற்கொள்ளும் அனைத்துக் கட்சி குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த பிரிவினைவாதிகளுக்கு முதல்வர் மெகபூபா முப்தி அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக காஷ்மீர் மாநில அரசியல் கட்சி தலைவர்களுக்கு மெகபூபா கடிதம் எழுதியுள்ளார். அதில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான குழுவினருக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், காஷ்மீர் மக்களின் நம்பகத்தன்மை காக்க பேச்சுவார்த்தையில் நீங்கள் இடம் பெற வேண்டும். பேச்சுவார்த்தையில் பங்கேற்பீர்கள் என நம்புகிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் மெகபூபா கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications