மணிப்பூரில் சக்திவாய்ந்த வெளிநாட்டு குண்டு வெடித்தது
Subscribe to Oneindia Tamil
இம்பால்: மணிப்பூரில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று வெடித்தது.
மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்தில் மியான்மர் எல்லையை ஒட்டியுள்ள புன்க்ரீட்டங் பகுதியில் நேற்று இரவு சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. தீவிரவாதிகள் புதைத்து வைத்திருந்த குண்டு வெடித்துள்ளது. இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. ஆனால் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்று சேதமடைந்தது.
விசாரணையில் அந்த குண்டு வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் அமைதித் தீவு என்று அழைக்கப்படும் உக்ருலில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாவட்டத்தில் தங்குல் பழங்குடியினர் அதிக அளவில் வசிக்கின்றனர்.
இந்த குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.












Click it and Unblock the Notifications