மிசோரம் சட்டசபை தேர்தல்: மிசோ தேசிய முன்னணிக்கு வெற்றி வாய்ப்பு.. ஏபிபி சி வோட்டர் கருத்து கணிப்பு
ஐஸ்வால்: வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் ஆளும் மிசோ தேசிய முன்னணி தலைமையிலான கூட்டணி ஆட்சியை தக்க வைக்கும் என ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.
தெலுங்கானா, ராஜஸ்தான், சத்தீஷ்கர், மத்திய பிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து பாஜக மற்றும் காங்கிரஸ் மற்றும் அந்தந்த மாநில கட்சிகள் தீவிர தேர்தல் வேலைகளில் ஈடுபட்டுள்ளன.

தேர்தல் தேதி நெருங்கி விட்டதால் கட்சியினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளும் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் மிசோரமில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் ஆளும் மிசோ தேசிய முன்னணி தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என்று ஏபிபி சி வோட்டர் கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது.
ஆளும் மிசோ தேசிய முன்னணி தலைமையிலான கூட்டணி 17-21 தொகுதிகளிலும், சோரம் மக்கள் இயக்கம், 10 முதல் 14 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்பு கூறுகிறது. இதே போல் காங்கிரஸ் கட்சி 6 முதல் 10 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாக கூற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications