3 நாள் ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார் பிரதமர் மோடி
டெல்லி: மூன்று நாள் அரசு முறை பயணமாக ஜப்பான் சென்ற பிரதமர் மோடி, இன்று தனது பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார்.
பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணமாக வியாழக்கிழமை ஜப்பான் நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். தலைநகர் டோக்கியோவில் அவர் இரு நாடுகளின் முக்கிய வர்த்தக பிரமுகர்களையும் சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து ஜப்பான் மன்னர் அகிடோவை (82) பிரதமர் மோடி நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். இருவரும் இந்தியா-ஜப்பான் இடையே நீண்டகால உறவு, ஆசியாவின் எதிர்காலம் குறித்து விவாதித்தனர்.

பின்னர் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயையும் மோடி சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே சிவில் அணுசக்தி, விவசாயம் உள்பட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
இதைத்தொடர்ந்து இன்று கோபே சென்ற மோடி பிரதமர் ஷின்சோ அபேயுடன் புல்லட் ரயிலில் பயணம் மேற்கொண்டார். மேலும், அங்கு வசிக்கும் இந்தியர்களிடையே உரையாற்றினார். இந்நிலையில், தனது மூன்று நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்ட அவர் டெல்லி வந்தடைந்தார்.












Click it and Unblock the Notifications