அரசியல் லாபத்துக்காக அனைத்து எல்லைகளையும் மோடி கடந்துவிட்டார்: சோனியா குற்றச்சாட்டு
லக்னொ: அரசியல் லாபத்துக்காக மோடி அனைத்து எல்லைகளையும் கடந்துவிட்டதாக சோனியாகாந்தி குற்றம்சாட்டினார். உத்தர பிரதேச மாநிலம் குசிநகரில் இன்று நடந்த காங்கிஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் சோனியாகாந்தி,
தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இருந்தபோது தீவிரவாதத்தால் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை பார்த்து தீவிரவாதத்தை எதிர்ப்பதில் தோல்வியடைந்துவிட்டதாக பாஜகவினர் கூறுகிறார்கள். ராணுவத்தில் ஒரே ரேங்க், ஒரே பதவி என்ற திட்டம், ஐக்கிய முற்போக்கு கூட்ட ணி அரசில்தான் கொண்டுவரப்பட்டது.

அரசியல் லாபத்துக்காக மோடி அனைத்து எல்லைகளையும் கடந்துவிட்டார். முன்னாள் பிரதமரான ராஜிவ்காந்தியையே இழிவுபடுத்திவிட்டார். நாட்டின் பிரதமராக கனவு காண்பவர் அதன் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும்.
உலக பொருளாதார நிலைமை இவ்வளவு சீர்கெட்டுள்ளபோதிலும் இந்தியா மட்டும் எப்படி இவ்வளவு உறுதியாக இருக்கிறது என்பதை பிற நாடுகள் உற்றுபார்த்துக் கொண்டுள்ளன. காங்கிரஸ் கட்சிதான் ஏழை, எளியவர்களை பற்றி எப்போதும் சிந்தித்துக்கொண்டிருக்கிறது. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், வீட்டு உரிமை, சுகாதார உரிமை, ஓய்வூதிய உரிமை சட்டங்களை கொண்டுவருவோம்.












Click it and Unblock the Notifications