ஐஸ்.. ஐஸ்.. மோடி ஐஸ்.. 50% ஆஃபர்.. போனா வராது.. சூரத்தை கலக்கும் மோடி முகம் பதியப்பட்ட குல்ஃபி!
காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் பாஜகவின் வெற்றியை கொண்டாடும் வகையில் ஐஸ்க்ரிம் பார்லர் ஒன்றில் விற்பனை செய்யப்படும் மோடி குல்ஃபி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றிபெற்றுள்ளது. பாஜக மட்டும் தனித்து 303 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது.
இதைத்தொடர்ந்து பாஜகவின் பிரதமர் வேட்பாளரான பிரதமர் மோடி நாளை நாட்டின் பிரதமராக பதவியேற்கிறார். நேரு, இந்திராகாந்தியை தொடர்ந்து மோடி இரண்டாவது முறையாக பதவியேற்கவுள்ளார்.

கொண்டாட்டம்
இதற்கான பதவியேற்பு விழா நாளை இரவு 7 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறுகிறது. பாஜகவின் வெற்றியை அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.

மோடியின் முகம்
இந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத் நகரில் இயங்கி வரும் ஐஸ்க்ரீம் பார்லர் ஒன்று மோடியின் வெற்றியை வித்தியாசமாக கொண்டாடி வருகிறது. அதாவது பாஜகவின் பிரமாண்ட வெற்றியை முன்னிட்டு மோடியின் முகம் அமைக்கப்பட்ட குல்ஃபியை அவர்கள் உருவாக்கியுள்ளனர்.

24 மணிநேரம் செலவு
முழுக்க முழுக்க 100% இயற்கை பொருட்களால் அந்த குல்ஃபிக்களை உருவாக்கியுள்ளனர். இந்த ஸ்பெஷல் குல்ஃபியின் 200 பீஸ்களை உருவாக்க 24 மணிநேரம் ஆனதாக ஐஸ்க்ரீம் பார்லரின் உரிமையாளர்ர் விவேக் அஜ்மிரா தெரிவித்துள்ளார்.

50% ஆஃபர்
இந்த ஸ்பெஷல் குல்ஃபி மே 30 ஆம் தேதி மோடி பிரதமராக பதவியேற்கும் வரைதான் விற்பனை செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மோடி சிட்டாபல் குல்ஃபி என பெயரிடப்பட்டுள்ள இந்த குல்ஃபி 50 சதவீத ஆஃபரில் விற்பனை செய்யப்படுகிறது.

மோடி தினம்
மோடியின் வெற்றியை கொண்டாடும் வகையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மோடி பதவியேற்கும் வரை இலவச சேவை அறிவித்துள்ளார். மோடி பிரமாண்ட வெற்றி பெற்ற மே 23ஆம் தேதியை மோடி தினமாக அறிவிக்க வேண்டும் என யோகா குரு பாபா ராம்தேவ் நேற்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications