நாகாலாந்து அமைதி ஒப்பந்தம்: ஜெயலலிதா, மமதா, சோனியாவுடன் மோடி தொலைபேசியில் பேச்சு
டெல்லி: நாகாலாந்தில் தனிநாடு கோரி போராடும் மூய்வா தலைமையிலான நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் அமைப்புடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியதாக மத்திய அரசு வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.
அகன்ற நாகாலாந்து என்ற நாகாலிம் தனிநாடு என்பதுதான் நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் அமைப்பின் நீண்டகால கோரிக்கை. ஆயுதம் ஏந்தி போராடும் இந்த அமைப்புடன் மத்திய அரசு தொடர்ந்து அமைதி ஒப்பந்தங்களை மேற்கொண்டு புதுப்பித்து வருகிறது.

டெல்லியில் பிரதமர் மோடி முன்னிலையில் மீண்டும் மூய்வா தலைமையிலான அமைப்புடன் மத்திய அரசு அமைதி ஒப்பந்தத்தை மேற்கொண்டது.
இந்த ஒப்பந்தத்தைத் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், லோக்சபா காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தமிழக முதல்வர் ஜெயலலிதா, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி உள்ளிட்ட தலைவர்களுடன் மோடி தொலைபேசியில் பேசியதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
செல்வமகள் சேமிப்பு திட்டம்.. நீங்க கணக்கு வச்சு இருக்கீங்களா?.. ஒரு இன்ச் கூட நகராது.. ஷாக் தகவல் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications