"வாத்தியார்" அத்வானிக்கு டிவிட்டரிலும், நேரிலும் "ஹேப்பி பர்த்டே" சொன்ன மோடி!
டெல்லி: பாஜக மூத்த தலைவர் அத்வானி மிகச் சிறந்த ஆசிரியர் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். இன்று அத்வானி பிறந்த நாள் என்பதால் அவருக்கு இவ்வாறு புகழாரம் சூட்டினார் பிரதமர்.
மேலும் அத்வானி வீட்டுக்கு நேரில் சென்றும் பிறந்த நாள் வாழ்த்து கூறி வாழ்த்தினார் மோடி.
இதுகுறித்து மோடி வெளியிட்டிருந்த டிவிட்டில், தனிப்பட்ட முறையில் நான் அத்வானியிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். எங்களைப் போன்ற கார்யகர்த்தாக்களுக்கு, அவர் ஒரு மிகச் சிறந்த ஆசிரியர், சுயநலமில்லாமல் செயல்படும் சேவையாளர் என்று கூறியிருந்தார் மோடி.

இன்று அத்வானியின் 88வது பிறந்த நாள் ஆகும். இதையொட்டி பல்வேறு பாஜக தலைவர்களும் அத்வானிக்குப் பிறந்த நாள் வாழ்த்து கூறி வருகின்றனர். முதலில் பீகார் தேர்தலில் பாஜக வெல்வதாக வந்த செய்தி்களால் அத்வானியை உற்சாகத்துடன் வாழ்த்தி வந்தனர் பாஜகவினர். ஆனால் நிலைமை தலைகீழாக மாறிப் போனதால் தற்போது பாஜக வட்டாரம் பெரும் ஏமாற்றமடைந்து விட்டது.
கடந்த 2014ம் ஆண்டு மத்தியில் மோடி தலைமையில் பாஜ்க ஆட்சியைப் பிடித்த பிறகு அமைதியாகி விட்டார் அத்வானி. முன்புபோல அவர் தீவிரமாக செயல்படுவதில்லை, பேசுவதில்லை. ஏன் எங்குமே போவதில்லை. அவரைப் போலவே பிற மூத்த தலைவர்களும் முடக்கப்பட்டு விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications