இனி குழந்தைகளை தத்துக் கொடுக்கப் போவதில்லை: அன்னை தெரசா மிஷினரி திடீர் முடிவு!
கொல்கத்தா: இந்தியாவின் மாற்றியமைக்கப்பட்ட குழந்தைகள் தத்தெடுப்பு சட்டத்தை கருத்தில் கொண்டு கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதியில் இருந்து குழந்தைகள் தத்து கொடுக்கும் திட்டத்தை கைவிட்டதாக அன்னை தெரசா அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட தொண்டு இயக்கமான "மிஷனரிஸ் ஆப் சாரிட்டிஸ்" அறிவித்துள்ளது.
கொல்கத்தா நகரை மையமாக கொண்டு நாடு முழுவதிலும் சுமார் 65 ஆண்டுகளாக சமூகத் தொண்டில் ஈடுபட்டுவரும் இந்த இயக்கம் அனாதையாக கைவிடப்படும் குழந்தைகளை தத்தெடுத்து குழந்தைகள் இல்லாதவர்களுக்கு உரிய நடைமுறைகளை பின்பற்றி தத்து கொடுத்து வந்துள்ளது. இதற்காக நாடு முழுவதும் 19 குழந்தைகள் காப்பகத்தை இந்த இயக்கம் நடத்தி வருகின்றது.

ஆனால், சமீபத்தில் மத்திய அரசு குழந்தைகள் தத்தெடுப்பு சட்டத்தில் சில புதிய விதிமுறைகளை இணைத்தது. அனைத்து தத்தெடுப்பு விவகாரங்களும் இதற்கென மத்திய அரசு உருவாக்கியுள்ள குழுவின் கவனத்துக்கு கொண்டுவர வேண்டும். ஒரே குழந்தையை காட்டி தத்து கொடுப்பதைவிட நான்கைந்து குழந்தைகளை காண்பித்து அதில் ஒன்றை தத்து எடுக்கும் தேர்வு முறை அறிமுகப்படுத்த வேண்டும்.
தனிநபருக்கும் உரிமை உண்டு:
தம்பதியராக இல்லாமல் தனிநபராக வரும் ஆண், பெண் இருவருக்கும் தத்தெடுக்கும் உரிமை அளிக்கப்பட வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் மத்திய அரசின் புதிய விதிமுறைகளில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தீர்மானமாக இருக்கு நிர்வாகம்:
தம்பதியாக வாழாமல் தனியாக வாழும் ஆண், பெண் மற்றும் ஆண், பெண் ஓரினச் சேர்க்கையாளர்கள் ஆகியோருக்கு குழந்தைகளை தத்து அளிப்பது இல்லை என்பதில் "மிஷனரிஸ் ஆப் சாரிட்டிஸ்" ஆரம்பத்தில் இருந்தே தீர்மானமாக உள்ளது.
தத்துக் கொடுக்கப் போவதில்லை:
இந்நிலையில், இந்த இயக்கத்தின் வழிகாட்டி நெறிமுறைகள் மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த தத்தெடுப்பு சட்டம் தொடர்பான விதிமுறைகளுடன் ஒத்துப்போகும் வாய்ப்பு இல்லை என்பதால் இனி குழந்தைகளை தத்து கொடுக்கும் சேவையில் இருந்து விலகி இருக்கப்போவதாக "மிஷனரிஸ் ஆப் சாரிட்டிஸ்" அறிவித்துள்ளது.
நிர்வாகிகள் மறுப்பு:
சமீபத்தில் பீகார் மற்றும் அசாம் மாநிலத்தில் வசிக்கும் தம்பதியரல்லாத சிலர் "மிஷனரிஸ் ஆப் சாரிட்டிஸ்" காப்பகத்தில் இருந்து குழந்தையை தத்து எடுக்க சென்றபோது, அதன் நிர்வாகிகள் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
வணிகப் பொருள் இல்லை:
இந்த திடீர் முடிவு குறித்து இந்த இயக்கத்தை சேர்ந்த மிக மூத்த சகோதரிகளில் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், "குழந்தைகளை வரிசையாக நிற்க வைத்து அதில் ஒன்றை தேர்வு செய்துகொள்ளுங்கள் என்று கூறுவது, குழந்தை இல்லாதவர்களுக்கு அவற்றை அன்பளிப்பாக தருவதாக அமையாது. மாறாக, குழந்தைகளை வணிகப்பொருளாக மாற்றுவதாக அமைந்துவிடும்" என வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
13 குழந்தைகள் காப்பகங்கள்:
இதற்கிடையில், மத்திய அரசின் வழிகாட்டி நெறிமுறைகளுக்கு கட்டுப்படாததால் இந்த தொண்டு இயக்கத்திற்கு சொந்தமாக 13 குழந்தைகள் காப்பகங்களை மூடுவதை தவிர வேறு வழி இல்லை என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications