ம.பி.யில் பள்ளி வேனில் வைத்து 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த டிரைவர்
போபால்: மத்திய பிரதேசத்தில் 5 வயது சிறுமியை பள்ளி வேன் டிரைவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஏரோடிரோம் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமி பள்ளிக்கு தினமும் வேனில் சென்று வந்தார். அவர் பள்ளிக்கு செல்லும் வேனை அஜய் சொலாங்கி(25) என்பவர் ஓட்டி வந்தார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை பள்ளி முடிந்ததும் குழந்தைகளை வீட்டில் விட அஜய் வேனில் கிளம்பினார்.

மற்ற குழந்தைகளை எல்லாம் வீட்டில் இறக்கிவிட்ட அவரின் காமப் பார்வை வேனில் தனியாக இருந்த 5 வயது சிறுமி மீது பட்டது. இதையடுத்து அவர் சிறுமியை வேனில் வைத்து பலாத்காரம் செய்தார். பின்னர் சிறுமியை வீட்டில் விட்டுவிட்டார்.
வீட்டிற்கு சென்ற சிறுமி வேன் டிரவைர் தன்னை ஏதோ செய்ததாக தெரிவித்தார். உடனே அவரின் பெற்றோர் இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். அவர்களின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அஜய்யை இன்று கைது செய்தனர்.
மேலும் இந்த சம்பவம் பற்றி விரிவான விசாரணை நடத்த எஸ்.பி. ஆபித் கான் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications