ம.பியில் உடனே நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி பாஜக வழக்கு.. நாளை விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவிப்பு
டெல்லி: மத்திய பிரதேச சட்டசபையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரி பாஜக சார்பில் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் தொடர்ந்த வழக்கை நாளை விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. அத்துடன் இதற்கு பதில் அளிக்குமாறு கமல் நாத் மற்றும் மத்திய பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்யா சிந்தியா தனது ஆதரவாளர்களான 6 அமைச்சர்கள் உள்பட 22 பேருடன் கமல்நாத்துக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். அதன்பிறகு 6 அமைச்சர்கள் உள்பட 22 பேரும் சபாநாயகருக்கு ராஜினாமா கடிதம் அனுப்பி வைத்தனர். இதன் காரணமாக கமல் நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசின் பலம் மொத்தம் உள்ள 230 இடங்களில் 99 ஆக குறைந்துள்ளது. அதேநேரம் பாஜகவின் பலம் 107 ஆக உள்ளது.

இதன் காரணமாக பாஜக முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்று ஆளுநருக்கு கோரிக்கை வைத்தார். இதன்படி நேற்று ஆளுநர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டார். ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனையை காரணம் காட்டி நேற்று சட்டசபை 26ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சி பாஜக முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மெஜாரிட்டி இல்லாததால் கமல்நாத்துக்கு முதல்வராக நீடிக்க ஒரு நிமிடம் கூட தகுதி இல்லை. எனவே உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என ஆளுநர் லால்ஜி டாண்டனிடம் நேற்று எம்எல்ஏக்களுடன் முறையிட்டார். இதையடுத்து இன்றைக்குள் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு இன்றைக்குள் சட்டசபையில் கட்டாயம் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் லால்ஜி டாண்டன் கெடு விதித்துள்ளார்.
இது ஒருபுறம் எனில் மத்திய பிரதேச சபாநாயகருக்கு உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று பாஜக தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பாஜகவின் மனுவுக்கு பதில் அளிக்குமாறு முதல்வர் கமல் நாத் மற்றும் மத்திய பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. அத்துடன் வழக்கை நாளை விசாரிப்பதாக தள்ளி வைத்தது. இதனால் நாளை முடிவு தெரிந்துவிடும்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications