"ஆஸி."யிலிருந்து ரிட்டர்ன்... "கங்காரு" போல செல்ல மகளை சுமந்து வந்த டோணி!!
ராஞ்சி: இந்திய கிரிக்கெட் விளையாட்டு வீரர் மகேந்திரசிங் டோணி தனது செல்ல மகளை கங்காரு குட்டிபோல சுமந்துகொண்டு சொந்த ஊரான ராஞ்சிக்கு வந்தது ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
டோணியின் மனைவி சாக்ஷிக்கு கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி அழகான பெண் பிறந்தது குர்கானில் உள்ள போர்டிஸ் தனியார் மருத்துவமனையில் பிறந்த இக்குழந்தை 3.7 கிலோ எடை இருந்தது. ஜிவா என்று அந்தக்குழந்தைக்கு பெயரிடப்பட்டுள்ளது.

டோணியின் செல்லமகள்
உலகக்கோப்பை தொடருக்காக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த டோணி பிறந்த குழந்தையைக் கூட பார்க்க வராமல் இருந்தார்.

பாசத்தந்தை
பெண்குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் திளைத்த டோணி இந்திய அணியை அரையிறுதிக்கு கொண்டு சென்றார். இந்தநிலையில் அரையிறுதிப் போட்டிவரை முன்னேறிய இந்திய அணி வெற்றியடையாமல் நாடு திரும்பியது.

மகளுடன் டோணி
இந்த நிலையில் நேற்றைய தினம் டெல்லியில் சுரேஷ் ரெய்னாவின் திருமண விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற டோணி இன்று தனது சொந்த ஊரான ராஞ்சிக்கு தனது மனைவி குழந்தையுடன் வந்தார்.

காங்காரு போல
தனது பிஞ்சு குழந்தையை கங்காரு போல வயிற்றில் பை கட்டி சுமந்து சென்றார். இந்த காட்சியை அங்கிருந்தவர்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.என்னதான் கேப்டன் என்றாலும் மகளுக்கு பாசமான தந்தைதான் என்பதை உணர்த்தியுள்ளார் டோணி.












Click it and Unblock the Notifications