தண்ணீர் வேண்டுமா?: தமிழக கூலித் தொழிலாளர்கள் மீது கேரளாவில் தாக்குதல்
திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டத்தை உயர்த்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததையடுத்து கேரளாவில் கூலி வேலை செய்யும் தமிழர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பு தமிழகத்திற்கு மகிழ்ச்சியையும், கேரளாவுக்கு வருத்தத்தையும் அளித்துள்ளது. தீர்ப்பு வெளியானதில் இருந்து கேரளாவில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
மேலும் கேரளாவில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் இடுக்கி மாவட்டம் பத்தனம்திட்டாவில் தங்கி கூலி வேலை செய்து வரும் தமிழக தொழிலாளர்களை சிலர் தாக்கியுள்ளனர். உங்களுக்கு தண்ணீர் வேண்டுமோ என்று கேட்டுக் கொண்டே தாக்கியுள்ளனர்.
இது குறித்து தென்காசியைச் சேர்ந்த மிகாவேல் என்பவர் கூறுகையில்,
நான் 9 ஆண்டுகளாக கேரளாவில் தங்கி கட்டிட கூலி வேலை பார்த்து வருகிறேன். என்னுடன் பல தமிழர்கள் வேலை பார்க்கிறார்கள். நாங்கள் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் எந்த பயலும் இங்கு இருக்கக் கூடாது, அனைவரும் ஓடுங்கள் என்று கூறி எங்களை தாக்கினார்கள். நாங்கள் அடியை வாங்கிக் கொண்டு அங்கிருந்து அமைதியாக சென்றோம் என்றார்.












Click it and Unblock the Notifications