Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை குறைக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் கேரளா புதிய மனு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியாகக் குறைக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் கேரளா அரசு புதியதாக மனுத்தாக்கல் செய்துள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி முல்லைப் பெரியாறு அணையில் 36 ஆண்டுகளுக்குப் பின்னர் 141 அடி அளவுக்கு நீர் தேக்கப்பட்டுள்ளது. இது தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Mullai periyar: Kerala approaches SC

முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழை தொடர்வால் நாளை அல்லது திங்கள்கிழமைக்குள் 142 அடியை எட்டிவிடும் நிலை உள்ளது. இதனால் தமிழகம் மற்றும் கேரளா பகுதிளில் பலத்த வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று காலை கேரளா அமைச்சரவைக் கூட்டம் அவசரமாக கூடியது. இந்தக் கூட்டத்தில் அணையின் நீர்மட்டத்தை 136 அடியாகக் குறைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் புதியதாக மனுத்தாக்கல் செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது.

இதனடிப்படையில் மூத்த வழக்கறிஞர் ஹரீஷ்சால்வே உச்சநீதிமன்றத்தில் கேரளா அரசு சார்பில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், அணையின் மதகுகளில் 2 பழுதடைந்துள்ளன.

இந்த நிலையில் அதிகளவு நீரைத் தேக்காமல் 136 அடி அளவுக்கே அணையில் நீரைத் தேக்கி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இம்மனு மீது விரைவில் விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+