704 அபாய கட்டிடங்கள்.... குடியிருப்போர் வெளியேற மும்பை மாநகராட்சி உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

மும்பை: அபாயகரமான கட்டிடங்களில் வசிப்பவர்கள், அந்த கட்டிடங்களில் இருந்து வெளியேற வேண்டும் என மும்பை மாநகராட்சி அதிரடியாக நோட்டீஸ்அனுப்பியுள்ளது.

மும்மையில் ஆண்டுக்கு ஒருமுறை மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாக மாநகராட்சியில் உள்ள கட்டடங்கள் ஆய்வு செய்யப்படும். இந்த ஆய்வின் போது, அபாய நிலையில் உள்ள கட்டிடங்களில் வசித்து வரும் மக்களை வெளியேற வேண்டும் மாநகராட்சி உத்தரவிட்டுவருகிறது.

Mumbai corporation identified nearly 740 buildings are in danger

இந்த ஆண்டு மும்பை மாநகராட்சி அதிகாரிகள் மாநகராட்சியில் உள்ள கட்டிடங்களை ஆய்வு செய்தனர். ஆய்வின் முடியில் 740 கட்டிடங்கள் மிகவும் அபயகரமாக இடியும் நிலையில் இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இந்த அபாயகரமான கட்டிடங்கள் பட்டியலில் தனியார் மற்றும் அரசுக்கு சொந்தமான கட்டிடங்களும் இடம் பெற்றுள்ளன.

இவற்றில் 146 கட்டிடங்கள் நகர் பகுதியில் அமைந்துள்ளன. கிழக்குப்புறநகர் பகுதியில் 286 கட்டிடங்கள், மேற்குபுறநகர் பகுதியில் 308 கட்டடங்கள் என 740 கட்டிடங்கள் அபாயகரமாக உள்ளன. எனவே, இந்த கட்டிடங்களில் வசிப்பவர்கள் உடனடியாக அதில் இருந்து வெளியேறுமாறு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+