பலாத்காரம் செய்து விட்டார்... மும்பை ஐபிஎஸ் அதிகாரி மீது மாடல் அழகி புகார்
மும்பை: மும்பையைச் சேர்ந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரி மீது ஒரு மாடல் அழகி பாலியல் பலாத்காரப் புகாரைக் கூறியுள்ளார். இதையடுத்து அந்த அதிகாரி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அந்த அதிகாரியின் பெயர் சுனில் பரஸ்கர். இவர் தற்போது போலீஸ் தலைமையகம், சிவில் உரிமைகள் பாதுகாப்புப் பிரிவில் டிஐஜியாக இருக்கிறார். இவர் கடந்த ஆண்டு உதவி ஆணையராக இருந்தபோது தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக மாடல் அழகி ஒருவர் புகார் கூறியுள்ளார்.
தன்னை பலமுறை பரஸ்கர் பலாத்காரம் செய்ததாகவும், ஒரு முறை ஹோட்டலில் வைத்து அத்துமீறி நடந்ததாகவும் அந்த அழகி கூறியுள்ளார். இதையடுத்து போலீஸ் விசாரணைக்கு ஆணையர் ராகேஷ் மரியா உ்ததரவிட்டார். தற்போது சம்பந்தப்பட்ட அதிகாரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர் மூத்த ஐபிஎஸ் அதிகாரி என்பதால் போலீஸார் மிகவும் கவனமுடன் இதைக் கையாளுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.