சுதந்திரதினத்தையொட்டி தீவிரவாத தாக்குதல் நடத்த சதி..உளவுத்துறை எச்சரிக்கையால் மும்பையில் பதற்றம்..
Subscribe to Oneindia Tamil
மும்பை : சுதந்திரதினத்தை முன்னிட்டு தீவிரவாதிகள் எந்தநேரத்திலும் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறைக்கு ரகசியமாக தகவல் கிடைத்துள்ளது.
மும்பையில் சுதந்திரதினத்தை முன்னிட்டு வான் வழியாக தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதிதிட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை அடுத்து மும்பை பகுதியில் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

மும்பையில் உள்ள முக்கியமான இடங்களை குறிவைத்து தீவிரவாதிகள் வான் வழியாக தாக்குதல் நடத்த சதிதிட்டம் தீட்டியுள்ளது பற்றிய தகவல், ரகசிய உரையாடல் வாயிலாக தெரியவந்துள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.
இதனையடுத்து மும்பை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மும்பையில் உள்ள முக்கியமான பகுதிகளில் ஆளில்லா விமானங்கள், மற்றும் பாரா விமானங்கள் முற்றிலும் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications