மதில் மேல் பூனையாக குஜராத் வாக்கு எண்ணிக்கை.. மும்பை பங்குச் சந்தை மீண்டும் ஏற்றம்!
குஜராத்தில் பாஜக மீண்டும் முன்னிலை வகிப்பதால் மும்பை பங்கு சந்தையில் ஏற்றம் ஏற்பட்டு இருக்கிறது.
Recommended Video
மும்பை: குஜராத்தில் பாஜக மீண்டும் முன்னிலை வகிப்பதால் மும்பை பங்கு சந்தையில் ஏற்றம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் மும்பை பங்கு சந்தையில் 720 புள்ளிகள் ஏற்றம் அடைந்து உள்ளது.
தற்போது குஜராத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்த வாக்கு எண்ணிக்கையின் தபால் வாக்கு முடிவில் பாஜக கட்சி முன்னிலை வகித்தது.
ஆனால் சில மணி நேரத்தில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்க தொடங்கியது. பல முக்கிய தலைவர்கள் பல்வேறு தொகுதிகளில் பின்னடைவை சந்தித்தார்கள்.
பாஜக கட்சியின் முதல்வர் வேட்பாளர் விஜய் ரூபாணியும் பின்னடைவை சந்தித்தார். தற்போது அவர் மீண்டும் முன்னிலை வகித்து உள்ளார். அதுபோல் பாஜக கட்சியும் முன்னிலை வகித்து இருக்கிறது.
இதனால் காலையில் 700 புள்ளிகள் சரிவை சந்தித்த பங்கு சந்தை மீண்டும் ஏற்றம் கண்டு இருக்கிறது. மொத்தமாக தற்போது 720 புள்ளிகள் மும்பை பங்குச்சந்தை ஏற்றம் கண்டு இருக்கிறது.