திருப்பதி கோவிலுக்கு ரூ.35 லட்சம் டிரக்கை நன்கொடையாக அளித்த சென்னை அப்துல் கனி
விஜயவாடா: சென்னையைச் சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர் திருப்பதி கோவிலுக்கு காய்கறிகள் ஏற்றிச் செல்ல குளிர்சாதன வசதியுடன் கூடிய டிரக் ஒன்றை நன்கொடையாக அளித்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்தவர் அப்துல் கனி. அவர் திருப்பதி கோவிலுக்கு காய்கறிகள் ஏற்றிச் செல்ல குளிர்சாதன வசதியுடன் கூடிய டிரக் ஒன்றை நன்கொடையாக அளித்துள்ளார். அந்த டிரக்கின் விலை ரூ.35 லட்சம் ஆகும்.
அந்த வாகனத்தை ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு கொடியசைத்து இன்று துவக்கி வைத்தார். திருப்பதி கோவிலுக்கான அன்னதான நிகழ்ச்சிக்கு பிறர் அளிக்கும் காய்கறிகளை அந்த டிரக் ஏற்றிச் செல்லும்.
திருப்பதி கோவில் அன்னதான திட்டத்திற்கு மந்தவா குட்டும்ப ராவ் என்பவரும், அவரது குடும்பத்தினரும் தான் கடந்த 2007ம் ஆண்டு முதல் காய்கறிகளை வழங்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்துல் கனி திருப்பதி கோவிலுக்கு டிரக்கை நன்கொடையாக அளித்துள்ளது மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளது.