நாட்டிலேயே பார்வையற்றவர்களுக்கான முதல் ரயில் நிலையமாக " மைசூர் ரயில் நிலையம் " அறிவிப்பு
மைசூரு: நாட்டிலேயே முதல் முறையாக, " மைசூரு ரயில் நிலையம் " பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான ரயில் நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
'ரயில் நிலையத்தின் பல்வேறு இடங்களில், பிரெய்லி முறையில் வழித்தட வரைபடங்கள் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கழிப்பறைகள், பிளாட்ஃபார்ம்கள், படிக்கட்டுகள் போன்றவற்றில் தொட்டுணரக்கூடிய வகையில் வரைபடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. படிக்கட்டுகளின் பிடிகளில் பிரெய்லி முறையில் எண்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும்,உணவகங்களில் உணவுப் பட்டியல்களிலும், ரயிலின் நேர அட்டவணைகளிலும் பிரெய்லி முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ரயில்வேயுடன் அனுபிரயாஸ் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் இனைந்து இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.
இதனை தொடங்கி வைத்துப்பேசிய மைசூரு நாடாளுமன்ற உறுப்பினர் பிரதாப் சின்ஹா கூறுகையில், பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்காக பிரெய்லியில் பதிக்கப்பட்ட விளம்பரங்கள், ரயில் பெட்டிகள் மற்றும் பிளாட்ஃபார்ம்களில் வைக்கப்பட்டுள்ளது.
2013-க்குப் பிறகு அமைக்கப்பட்ட ஏசி அல்லாத வழக்கமான கோச்சுகளில் இருக்கும் பர்த்கள், கழிப்பறைகள் மற்றும் கதவுகளில், உலோகத்தில் பிரெய்லி முறையில் தகவல்கள் அமைக்கப்பட்டு பார்வையற்றவர்களுக்கு உதவும் வகையில் உள்ளது, என்றார்.












Click it and Unblock the Notifications