ஆந்திராவில் அதிர்ச்சி.. நகரி தொகுதியில் நடிகை ரோஜாவுக்கு படுதோல்வி.. தெலுங்கு தேசம் வெற்றி
விசாகப்பட்டினம்: ஆந்திராவில் ஜெகன் கட்சி பெரிய தோல்வியை நோக்கிச் சென்று கொண்டு இருக்கும் நிலையில், அங்கு நகரி தொகுதியில் போட்டியிட்ட ரோஜா தோல்வி அடைந்துள்ளார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம் சிக்கிம் மாநிலங்களிலும் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றன. நமது அண்டை மாநிலமான ஆந்திராவுக்கு மே 13ஆம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தலுடன் சட்டசபைத் தேர்தலும் நடத்தப்பட்டன.

ஆந்திரப் பிரதேச சட்டசபை: இன்று லோக்சபா தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் நிலையில், ஆந்திரா சட்டசபைத் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்படுகிறது. ஆந்திராவைப் பொறுத்தவரை அங்கு ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒஸ்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது. அவருக்கு எதிராக சந்திரபாபு நாயுடு களமிறங்குகிறார். பாஜக மற்றும் பவன் கல்யாண் கட்சியுடன் இணைந்து சந்திரபாபு நாயுடு களமிறங்குகிறார்.
ஆந்திராவில் இப்போதைய சூழலை வைத்துப் பார்க்கும் போது சந்திரபாபு நாயுடு மிகப் பெரிய வெற்றியைப் பெறுவார் என்றே தெரிகிறது. ஜெகன் கட்சியில் இருந்த பல முக்கிய தலைவர்களும் தோல்வியைச் சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அதன்படி ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி அமைச்சரவையில் சுற்றுலாத் துறை அமைச்சராக இருப்பவர் நடிகை ரோஜா. அவர் இந்த முறை ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள நகரி தொகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். அவருக்கு எதிராகத் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து ஜி பானு பிரகாஷ் என்பவர் போட்டியிட்டார். அதேபோல காங்கிரஸ் கட்சியில் இருந்து ராகேஷ் ரெட்டி போட்டியிட்டார்.
பின்னடைவு: ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி மிகப் பெரிய வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அங்கு மிகப் பெரிய தோல்வியை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது. அது ரோஜா போட்டியிட்ட நகரி தொகுதியிலும் எதிரொலித்துள்ளது.
ஆந்திராவின் நகரி தொகுதியில் போட்டியிட்ட நடிகை ரோஜா பெற்ற வாக்குகளை காட்டிலும் தெலுங்கு தேசம் வேட்பாளர் பானு பிரகாஷ் சுமார் 40 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
என்ன காரணம்: தேர்தல் முடிவுகளில் இதே டிரெண்ட் தொடர்ந்தால் ஆந்திராவின் நகரி தொகுதியில் நடிகை ரோஜாவுக்குப் படுதோல்வி உறுதி என்றே கூறப்படுகிறது. வாக்குப்பதிவு நாளன்றே ரோஜா தனக்கு எதிராகச் சொந்த கட்சித் தலைவர்களே வேலை பார்த்ததாக பகீர் குற்றச்சாட்டை முன்வைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த தேர்தலில் என்ன நடந்தது: கடந்த தேர்தலில் ஆந்திராவில் ஜெகன் கட்சி ஒரு க்ளீன் ஸ்வீப் வெற்றியைப் பதிவு செய்தது. ஆந்திராவில் மொத்தமுள்ள 175 இடங்களில் 151இல் வென்று அசுர பலத்துடன் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியைப் பிடித்தார். அந்தத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு கட்சியால் வெறும் 23 இடங்களில் வெல்ல முடிந்தது. காங்கிரஸ் மற்றும் பாஜகவால் ஒரு இடத்திலும் வெல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications