பால்கனியில் மணமக்கள்... பேண்டு வாத்தியங்களுடன் வந்த போலீசார்... இப்படித்தான் நடக்க வேணும் திருமணம்!
வீட்டிலேயே திருமணம் செய்துகொண்ட புதுமண தம்பதிக்கு நாசிக் போலீசார் அமோக வரவேற்பு அளித்துள்ளனர்.
நாசிக்: மகாராஷ்ட்ரா மாநிலம் நாசிக்கில், வீட்டிலேயே திருமணம் செய்துகொண்ட புதுமண தம்பதிக்கு போலீசார் அளித்த வரவேற்பு வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
Recommended Video
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 45 நாட்களுக்கு மேலாக இந்திய மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர். ஒருபுறம் ஏழை எளிய தொழிலாளர்கள் வருமானம் இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மறுபுறம் நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இந்த கொடுமையில் இருந்து எப்போது தப்பிப்போம் என மக்கள் தவித்து வருகின்றனர்.

இதற்கிடையே ஏப்ரல், மே மாதங்களில் நிச்சயம் செய்யப்பட்டிருந்த பல திருமணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கோயில்களும் மூடப்பட்டுள்ள நிலையில், சிலர் தங்கள் வீட்டிலேயே திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையைத் தொடங்கி வருகின்றனர்.
அப்படித்தான் மகாராஷ்ட்ரா மாநிலம் நாசிக்கைச் சேர்ந்த ஒரு ஆணும், பெண்ணும் தங்கள் வீட்டிலேயே மிக எளிமையாக திருமணம் செய்து கொண்டனர். அதை அறிந்த அந்த ஊர் போலீசார், புதுமண தம்பதியின் இந்த செயலை பாராட்டும் வகையில் அமோக வரவேற்பு அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக டிவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர் நாசிக் போலீஸ். அந்த வீடியோவில், புதுமண தம்பதி தங்கள் வீட்டு பால்கனியில் நிற்கின்றனர். பேண்ட் வாத்தியங்கடன் கீழே இருக்கும் போலீசார் இந்தி பட பாடல் ஒன்றை பாடி தம்பதியை வாழ்த்துகின்றனர். அக்கம் பக்கத்தில் இருக்கும் மக்கள் இதனை தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.
"கொரோனா ஊரடங்கு உத்தரவை மதித்து தங்கள் வீட்டிலேயே திருமணம் செய்து கொண்ட தம்பதிக்கு வாழ்த்துகள். அவர்களை பாராட்டுவதற்காகவே நாசிக் போலீஸ் இப்படி செய்கிறது", என அந்த வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். மகாராஷ்ட்ரா மாநில முதல்வர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்திலும், அந்த தம்பதிக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications