தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியீடு.. 19 லட்சம் பெயர்கள் நீக்கம்.. அசாமில் பதற்றம்.. போலீஸ் குவிப்பு
Recommended Video
டெல்லி: அசாம் மாநில மக்களின் குடியுரிமையை உறுதி செய்யும் தேசிய குடிமக்கள் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 19 லட்சம் பேரின் பெயர்கள் இல்லை என்பதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
வங்கதேசத்தில் இருந்து ஏராளமானோர் இந்தியாவின் அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறி வருகின்றனர். மேலும் அரசு அறிவிக்கும் அத்தனை திட்டங்களையும் இந்திய மக்களை காட்டிலும் இவர்களே பயன்படுத்தி வருவதாக புகார்கள் எழுந்தன. மேலும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் இருந்து வருவதாக புகார்கள் எழுந்தன.
மற்ற நாடுகளில் அந்த நாட்டினருக்கு மட்டுமே சலுகைகள் வழங்கும் நிலையில் இந்தியாவில் மட்டும் உள்நாட்டு சலுகைகளை வெளிநாட்டினர் அனுபவித்து வருவதாக மக்கள் வேதனை தெரிவித்தனர்.

அடையாளம் காண
இதையடுத்து அசாம் மாநில மக்களின் குடியுரிமையை உறுதி செய்யும் வகையிலும் வங்கதேசம்அண்டை நாடுகளில் இருந்து வந்து குடியேறியவர்களை அடையாளம் காணவும் தேசிய குடிமக்கள் இறுதி பட்டியல் கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூலை 30-ஆம் தேதி வெளியானது.

3.11 கோடி பெயர்கள்
ஆனால் அதில் 40 லட்சம் பேரின் பெயர்கள் விடுப்பட்டன. இதையடுத்து உச்சநீதிமன்றத்தின் உத்தரவுபடி மறுபட்டியல் இன்று வெளியானது. இதில் 19,06,657 லட்சம் பேரின் பெயர்கள் விடுப்பட்டுள்ளது. மொத்தம் 3.11 கோடி பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

வெளியேற்றம்?
19 லட்சம் பெயர்கள் விடுபட்டுள்ளதால் அசாம் மாநிலத்தில் கலவரம் வெடிக்கும் என்பதால் ஏராளமானோர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றம் நீடித்து வருகிறது. இவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. உரிய ஆவணங்கள் இல்லாதவர்கள் அசாமிலிருந்து வெளியேற்றப்படுவார்களா இல்லை மாற்று ஏற்பாடுகள் செய்யப்படுமா என எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.

வெளிநாட்டு தீர்ப்பாயம்
இதுகுறித்து அரசு கூறுகையில் , 19 லட்சம் பேர் தாங்கள் இந்திய குடிமக்கள் என்பதற்கான ஆவணங்களை முறையாக சமர்ப்பிக்கவில்லை. எனவே இந்த குடிமக்கள் பட்டியலில் விடுபட்டுள்ளோர் இந்திய குடியுரிமையை நிரூபிக்க வெளிநாட்டு தீர்ப்பாயத்தில் முறையிடலாம் என கூறப்பட்டுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications