பிரதமர் மோடியுடன் நவாஸ் ஷெரீப் பேச்சு! நிலநடுக்கத்தால் இந்தியாவில் உயிரிழந்தோருக்கு இரங்கல்!!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் அழைத்து நிலநடுக்கத்தால் இந்தியாவில் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

நேபாளத்தை நிலைகுலைய வைத்த நிலநடுக்கம் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோரை காவு கொண்டது. இன்னமும் அங்கு மீட்புப் பணிகள் தொடர்கின்றன.

நேபாளத்து நிலநடுக்கம் இந்தியாவிலும் எதிரொலித்தது. இந்நிலநடுக்கத்துக்கு 100 பேர் வரை பலியாகி உள்ளனர்.

Nawaz Sharif calls PM Narendra Modi, appreciates India's rescue efforts in Nepal

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்ட பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இந்தியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

மேலும் நேபாளத்தில் இந்தியா மீட்புப் பணிகளை துரித கதியில் மேற்கொண்டதற்கும் நவாஸ் ஷெரீப் பாராட்டு தெரிவித்தார் என்று தமது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்த பேச்சுகளின் போது, பேரிடர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் சார்க் நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் தாம் நவாஸ் ஷெரீப்பிடம் தெரிவித்ததாகவும் மோடி கூறியுள்ளார். இந்த யோசனையை நவாஸ் ஷெரீப் பாராட்டினார் என்றும் மற்றொரு ட்வீட் பதிவில் மோடி எழுதியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+