டெல்லியில் அடுத்த ஆட்சி ஆம் ஆத்மி கையில்- நியூஸ் எக்ஸ் எக்ஸிட் போல்
டெல்லி: டெல்லி சட்டசபைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெருமபான்மை பலம் கிடைக்காது என்று நியூஸ் எக்ஸ் டிவியின் வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவு தெரிவித்துள்ளது.
இந்த டிவியின் எக்ஸிட் போல் கணிப்பின்படி பாஜக தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தாலும் கூட அதிக அளவிலான சீட்களை அது கைப்பற்ற முடியாத நிலையே காணப்படுகிறது.
வாக்கு சதவீதத்தையும் காங்கிரஸ், பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் கிட்டத்தட்ட சரியாக பகிர்ந்து கொண்டுள்ளன.

மொத்தம் உள்ள 70 இடங்களில் பாஜகவுக்கு 29 இடங்கள் கிடைக்கலாம். காங்கரிஸுக்கு 21 இடங்களும், ஆம் ஆத்மி கட்சிக்கு 16 இடங்களும் கிடைக்கலாம் என்று இந்த கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
பகுஜன் சமாஜ் கட்சிக்கு 2 இடங்களும், மற்றவர்களுக்கு 2 இடமும் கிடைக்கும் என்று நியூஸ் எக்ஸ் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
இதன்படி டெல்லி சட்டசபையில் இந்த முறை யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது. அடுத்த ஆட்சி அமைவது ஆம் ஆத்மி கையில் உள்ளது.












Click it and Unblock the Notifications