For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போபாலில் ஐஎஸ் ஆதரவாளரான 24 வயது வாலிபர் கைது

By Siva
Google Oneindia Tamil News

போபால்: மத்திய பிரதேசத்தில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளர் ஒருவர் தேசிய புலனாய்வு அமைப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் ரைசன் மாவட்டத்தில் உள்ள பார்கேடாவைச் சேர்ந்தவர் அசார் இக்பால்(24). ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர். அவர் போபாலில் இருக்கும் புட்லி கார் பகுதியில் உள்ள லாய்க் அகமது என்பவரின் வீட்டில் பதுங்கியிருந்தார்.

NIA arrests 24-year-old ISIS suspect from Bhopal

அவர் பதுங்கி இருக்கும் தகவல் அறிந்து தேசிய புலனாய் அமைப்பு அதிகாரிகள் அகமதுவின் வீட்டிற்கு சென்று இக்பாலை திங்கட்கிழமை கைது செய்தனர். இக்பாலை கைது செய்ய தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளுக்கு போபால் போலீசார் உதவி செய்தனர்.

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் தேசிய புலனாய்வு அமைப்பினர் கடந்த டிசம்பர் மாதம் 9ம் தேதி டெல்லியில் 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்து ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் 15 பேரை கைது செய்திருந்தனர்.

இந்நிலையில் தான் இக்பால் போபாலில் கைது செய்யப்பட்டுள்ளார்.

English summary
The National Investigation Agency arrested a 24-year-old ISIS suspect from Bhopal as part of the agency's crackdown on sympathisers of the terror group.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X