நிர்பயா குற்றவாளிகளின் கடைசி முயற்சியும் தோல்வி.. பவனின் கருணை மனு நிராகரிப்பு.. நாளை தூக்கு?
டெல்லி: நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா கடைசி வாய்ப்பாக குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பி இருந்தார். இந்த மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று உடனடியாக நிராகரித்தார். இதேபோல் அக்சய் குமார் சிங்கின் இரண்டாவது கருணை மனுவை நிராகரித்துள்ளார்
டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா கடந்த 2012ம் ஆண்டு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கடுமையாக தாக்கப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக முகேஷ்குமார் (32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்சய் குமார் சிங் (33) ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களை நாளை அதாவது மார்ச் 3ம் தேதி டெல்லி திகார் சிறையில் தூக்கிலிட வேண்டும் என்று கடந்த 17ம் தேதி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி குற்றவாளி பவன் குப்தா உச்ச நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சீராய்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் டெல்லி நீதிமன்றம் பிறப்பித்த மரண தண்டனையை நிறைவேற்றும் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று பவன் குப்தாவின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என்வி ரமணா, அருண் மிஸ்ரா, ஆர்எப் நாரிமன், ஆர் பானுமதி, அசோக் பூஷன் ஆகிய ஐந்து நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதையடுத்து பவன் குப்தா தனக்கு இருக்கும் கடைசி வாய்ப்பான கருணை மனு வாய்ப்பை கையில் எடுத்தார். குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்துக்கு கருணை மனு அனுப்பினார். இதேபோல் முன்னதாக அக்சய் குமார் சிங்கும் கருணை மனு அனுப்பி இருந்தார். இந்த இரு மனுக்களை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உடனடியாக நிராகரித்தார்.
இதனால் நாளை முகேஷ்குமார் (32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்சய் குமார் சிங் (33) நாளை காலை 6 மணிக்கு டெல்லி திகார் சிறையில் தூக்கிலிடப்டுவார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் முன்னதாக டெல்லி நீதிமன்றம் கருணை மனுவை காரணம் காட்டி நாளை மரண தண்டனை நிறைவேற்ற தடை விதிக்க முடியாது என டெல்லி நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டு இருந்தது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications