நிர்பயாவை சீரழித்தவர்களில் கொடூரமானவரான மைனருக்கு விடுதலையா?: பெற்றோர் கவலை
டெல்லி: நாட்டையே அதிர வைத்த நிர்பயா பலாத்கார வழக்கில் கைது செய்ய்பட்ட மைனர் குற்றவாளி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து இந்த மாத இறுதியில் விடுதலை செய்யப்படுகிறார்.
கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதி இரவு டெல்லியில் ஓடும் பேருந்தில் 23 வயது பிஸியோதெரபி மாணவி நிர்பயா மைனர் உள்பட 6 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாகத் தாக்கப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார்.
இந்த வழக்கில் 17 வயது 6 மாதமான மைனர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

விடுதலை
மைனர் மீதான குற்றம் தனியாக விசாரிக்கப்பட்டு அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தண்டனை காலம் முடிந்து அந்த மைனர் இந்த மாத இறுதியில் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து விடுதலை செய்யப்பட உள்ளார்.

என்.ஜி.ஓ.
அவர் விடுவிக்கப்பட்ட பிறகு ஓராண்டுக்கு என்.ஜி.ஓ. ஒன்றின் கண்காணிப்பில் இருப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அவ்வாறு எதுவும் செய்யப்படாது என்று டெல்லி அரசு அறிவித்தது.

மோசமானவன்
நிர்பயாவை கொடூரமாக பலாத்காரம் செய்து தாக்கியவர்களில் மைனர் தான் மோசமானவர் என்று நிர்பயாவின் பெற்றோர் கூறியும் பலனில்லை.

ஒப்பந்தம்
விடுவிக்கப்பட்ட பிறகு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க மாட்டேன் என்று மைனர் குற்றவாளியிடம் ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கலாமா என்று மத்திய உள்துறை அமைச்சகம் யோசனையில் உள்ளது.

கோபம்
23 வயது மகளை சீரழித்து தாக்கிய குற்றவாளிகளில் ஒருவர் விடுதலையாகி பிறரை போன்று சுதந்திரமாக வாழப் போகிறார் என்பதை நினைத்து நிர்பயாவின் பெற்றோர் கோபத்தில் உள்ளனர்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications