நித்தியானந்தா ஆசிரமத்தில் குஜராத் போலீஸ் அதிரடி.. 2 பெண் நிர்வாகிகள் கைது.. 6 பிரிவுகளில் வழக்கு!
நித்யானந்தா ஆசிரமத்தின் பெண் நிர்வாகிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்
காந்திநகர்: நித்யானந்தாவின் கெடுபிடி ஆசிரமத்துக்குள் போலீசார் அதிரடியாக நுழைந்து, மட நிர்வாகிகள் 2 பேரையும் கைது செய்துள்ளனர். தன் மகள்களை சந்திக்க விடாமல் தடுத்ததாக இளம்பெண்களின் தந்தையார் புகார் தெரிவித்ததன், அடிப்படையில் அகமதாபாத் ஆசிரமத்தில் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
பெங்களூரை சேர்ந்தவர் ஜனார்த்தனா ஷர்மா. இவர் குஜராத் ஹைகோர்ட்டில் ஒரு மனுவினை தாக்கல் செய்தார். அதில், அவர் சொல்லி உள்ளதாவது:

"கடந்த 2013-ல் பெங்களூரிலுள்ள நித்தியானந்தாவுக்குச் சொந்தமான கல்வி நிறுவனத்தில் 7 முதல் 15 வயதுடைய மகள்களைச் சேர்த்தோம். ஆனால், அவர்கள் பெங்களூரிலிருந்து அகமதாபாத் கிளைக்கு மாற்றப்பட்டு விட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.
அதனால் அகமதாபாத் ஆசிரமத்துக்கு போலீசுடன் சென்றோம். ஆனால் அங்குள்ள ஆசிரம ஊழியர்களான பிராணப்பிரியா, பிரியா தத்துவா ஆகியோர் எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. இதன் பிறகு சென்று ஒரு மகளை மீட்டோம். ஆனால் மூத்த மகள்கள் லோகமுத்ரா, மற்றும் நந்திதா, இரண்டு பேருமே வரமறுத்துவிட்டார்கள். அதனால் அவர்களை மீட்டுத்தருமாறு அந்த தம்பதி மனுவில் கூறியுள்ளார்.
தன் குழந்தைகளை கடத்தி சென்று அடைத்து வைத்துள்ளதாக அகமதாபாத் விவேகானந்தா நகர் ஸ்டேஷனிலும் ஜனார்த்தன ஷர்மா புகார் மனு அளித்தார். இதையடுத்து நித்யானந்தா உள்ளிட்டோர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக அகமதாபாத் புறநகர் காவல் கண்காணிப்பாளர் ஆர்.வி. ஆச்சாரியும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஆசிரம நிர்வாகிகள் 2 பேர் கைதாகி உள்ளனர். பிராணப்பிரியா, பிரியா தத்துவா என்ற இவர்கள் 2 பேர்தான், பெற்ற மகள்களை பார்க்க விடாமலும், ஆசிரமத்துக்குள் நுழைய விடாமலும் கெடுபிடி செய்தவர்கள்.. ஜனார்த்தன சர்மாவின் ஹேபியஸ் கார்பஸ் மனுவினை தொடர்ந்து, இவர்களை கைது செய்ய கோர்ட் உத்தரவிட்டது. அதனடிப்படையிலேயே ஆசிரமத்திற்குள் நுழைந்து போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications