கட்கரியின் "உச்சா" பேச்சு.... டிவிட்டர், பேஸ்புக்கில் பிடுங்கித் தின்னும் வலைவாசிகள்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தனது பங்களாவில் உள்ள செடிகளுக்கு தனது சிறுநீரை ஊற்றி வளர்ப்பதாக கூறிய மத்திய அமைச்சர் நிதின் கட்காரியை மக்கள் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.

டெல்லியில் உள்ள தனது பங்களாவில் இருக்கும் செடிகள் மற்றும் மரங்களுக்கு தண்ணீருக்கு பதிலாக தன்னுடைய சிறுநீரை ஊற்றி வளர்ப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். சிறுநீர் ஊற்றப்படும் செடிகளும், மரங்களும் வேகமாக வளர்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து மக்கள் கட்காரியை கிண்டல் செய்து ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

அஷுதோஷ்

தான் காலையில் சாப்பிட்ட சாலடில் இருந்த காய்கறிகள் நிதின் கட்காரியின் தோட்டத்தில் விளைந்தவை என்பதை தெரிந்ததும் அஷுதோஷின் முகபாவனை என்று அஷ்வின் குமார் என்பவர் ட்வீட் செய்துள்ளார்.

கட்காரி

உங்கள் பண்ணைக்கு தண்ணீர் போதவில்லை என்றால் தயவு செய்து நிதின் கட்காரியை தொடர்பு கொள்ளுங்கள். அவர் 10 கோடி பாஜக தொண்டர்களை கேட்பார் என விஷால் போசலே என்பவர் தெரிவித்துள்ளார்.

கழிவறை

பிரதமர் கழிவறையில் சிறுநீர் கழிக்குமாறு கூறுகிறார். கட்காரி தோட்டத்தில் சிறுநீர் கழிக்கச் சொல்கிறார். எங்கு தான் சிறுநீர் கழிப்பது என்பதை தெரிந்து கொள்ள நாடு விரும்புகிறது என்கிறார் பவன் கேரா.

ஆர்டிஐ

கட்காரி அளித்த விருந்தின்போது பரிமாறப்பட்ட சாலடில் இருந்த காய்கறிகள் அவரது தோட்டத்தில் விளைந்தவையா என்பதை தெரிந்து கொள்ள அமெரிக்க தூதர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்துள்ளார் என்று டாக்டர் கைலாஷ் சரண் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+