பீகார் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்தார் நிதிஷ்குமார்.. 129 எம்எல்ஏக்கள் ஆதரவு
பாட்னா: பீகார் மாநில சட்டசபையில் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜேடியூ-பாஜக கூட்டணி அரசு இன்று நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது. 243 எம்.எல்.ஏக்களை கொண்ட சட்டசபையில் 129 எம்எல்ஏக்கள் ஆதரவு கிடைத்துள்ளது. பெரும்பான்மையை நிரூபித்ததை அடுத்து அவரது அரசு தப்பியுள்ளது.
பீகார் மாநிலத்தில் கடந்த 2020ஆண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் பாஜக- நிதிஷ்குமாரின் ஜேடியூ கட்சி வென்று ஆட்சியைக் கைப்பற்றியது. முதல்வராக இருந்த நிதிஷ்குமார் திடீரென பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டார்.

இதனையடுத்து நிதிஷ்குமாரின் ஜேடியூ-காங்கிரஸ்- ஆர்ஜேடி-இடதுசாரிகள் இணைந்து புதிய கூட்டணி ஆட்சி அமைந்தது. இந்த கூட்டணியில் இருந்தும் அண்மையில் நிதிஷ்குமார் விலகி மீண்டும் பாஜக அணியில் இணைந்தார்.
இதனையடுத்து கடந்த 4 ஆண்டுகளில் 2 முறை பதவியை ராஜினாமா செய்துவிட்டு 3-வது முறையாக முதல்வராக பதவியேற்றுள்ளார் நிதிஷ்குமார். இதனைத் தொடர்ந்து நிதிஷ்குமார் அரசு மீது இன்று பீகார் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
பரபரப்பான சூழ்நிலையில் நிதிஷ்குமார் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு பீகார் சட்டசபையில் இன்று நடைபெற உள்ளது. 243 எம்.எல்.ஏக்களை கொண்ட சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 122 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், 128 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தனக்கு உள்ளதாக நிதிஷ் தெரிவித்திருந்தார்.
பீகார் சட்டசபையில் மொத்தம் 243 எம்.எல்.ஏக்கள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 122 எம்.எல்.ஏக்கள். தற்போதைய நிலையில் பீகார் சட்டசபையில் நிதிஷ்குமார் அரசுக்கு ஆதரவு: 127 பாஜக - 78 ஹெச்.ஏ.எம்.எஸ்-4 நிதிஷ்குமாரின் ஜேடியூ- 45 எதிர்க்கட்சிகள்: 114 லாலுவின் ஆர்ஜேடி- 79 காங்கிரஸ் -19 இடதுசாரிகள் - 16 பீகாரில் பெரும்பான்மையைவிட 5 எம்.எல்.ஏக்கள் கூடுதலாக நிதிஷ் அரசுக்கு உள்ளது.
இருந்த போதும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பாஜக வளைத்துவிடக் கூடும் என்பதால் அவர்கள் அத்தனை பேரையும் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்துக்கு அனுப்பி வைத்துள்ளது டெல்லி மேலிடம். இந்த பின்னணியில் திடீரென நிதிஷ்குமாரின் ஜேடியூ கட்சியில் 6 எம்.எல்.ஏக்கள் மாயமானார்கள்.
இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் நிலையில் திடீரென ஆளும் கட்சியின் 6 எம்.எல்.ஏக்கள் காணாமல் போனது முதல்வர் நிதிஷ்குமார் தரப்பை அப்செட் ஆக்கியது. நிதிஷ்குமார் அரசு இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்பி பிழைக்குமார் என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்றைய தினம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ்குமார் அரசு பெரும்பான்மையை நிரூபித்துள்ளது.
122 எம்எல்ஏக்கள் ஆட்சிக்கு தேவைப்படும் நிலையில் 129 எம்எல்ஏக்கள் வாக்களித்துள்ளனர். இதனையடுத்து அரசு தப்பியுள்ளது முதல்வராக நீடிக்கிறார் நிதிஷ்குமார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications